கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, சிங்கவால் குரங்குகள் போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி மக்களையும் அச்சுரித்து வருகிறது,
இந்நிலையில் சில தினங்களாக வால்பாறை பகுதியில் உள்ள காமராஜர் நகர், துளசிங்க நகர், கூட்டுறவு காலனி, கக்கன் காலனி, அண்ணா நகர், வால்பாறை டவுன் பகுதி, வாழைத் தோட்டம் போன்ற பகுதிகளில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.
வீடுகளில் வளர்க்கும் நாய், கோழி, ஆடு போன்றவைகளை வேட்டையாடி கொன்று சாப்பிட்டு வந்துள்ளது. இந்நிலையில் கூட்டுறவு காலனி பகுதியில் வீடு அருகில் 3 சிறுத்தைகள் இரவு சுமார் 1 மணி அளவில் நடந்து சென்றுள்ளது. சிறுத்தை நடமாட்டம் அருகில் இருந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. குடியிருப்பு பகுதிக்குள் நடமாடும் சிறுத்தையை அடர்ந்த வன பகுதிக்குள் விரட்ட வனத்துறையினருக்கு வால்பாறை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“