Advertisment

குனியமுத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்? கேமராக்கள் பொருத்தி வனத்துறை கண்காணிப்பு

கோவை குனியமுத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து வனத் துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
cbe Leopa.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை குனியமுத்தூர் ஜே.ஜே நகர் பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்த நாய் மற்றும் பூனை விலங்குகள் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது.  

Advertisment

இந்நிலையில் அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், நாய், பூனை போன்றவற்றை சிறுத்தை தான் வேட்டையாடுவதாகவும் தகவல் பரவியது.  இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் மதுக்கரை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் நேற்று ஜே.ஜே.நகர், அபிராமி நகர் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் வனத்துறை குழுவினர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.  

அப்பகுதியில் உள்ள புதர்கள், பாழடைந்த கட்டிடங்கள் போன்றவற்றில் சந்தேகப்படும் படியான விலங்கினங்கள் ஏதேனும்  இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். மேலும் இந்த பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தி உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

    Coimbatore
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment