/indian-express-tamil/media/media_files/2025/08/19/whatsapp-image-202-2025-08-19-10-29-08.jpg)
தமிழகத்தில் செயல்படும் மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்தால், அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை உட்பட பல்வேறு இடங்களில் இயங்கும் தனியார் மனமகிழ் மன்றங்களில் விதிமீறல்கள் நடப்பதாக ஏராளமானோர் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி. அருள்முருகன் ஆகியோர் அமர்வில் வழக்கு விசாரணை நடந்தது.
அதில், “மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் எஃப்எல்-2 உரிமம் பெற்ற மதுபான விற்பனைக் கூடங்கள் பெருகி வருகின்றன. சட்டப்படி இங்கு விளையாட்டு செயல்பாடுகள் நடைபெற வேண்டும். ஆனால் நடைமுறையில் மது விற்பனை மட்டுமே நடக்கிறது. அதுவும் உறுப்பினர்களல்லாதவர்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், மனமகிழ் மன்றங்களை கண்காணிக்க பதிவுத்துறை ஐஜி, மதுவிலக்கு ஆணையர், மாநகர் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விதிமீறல் நடந்தால் உரிமம் ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.