உயிருக்கு அச்சுறுத்தல்: கிரானைட் ஊழல் வழக்கில் ஆஜராக சகாயம் ஐ.ஏ.எஸ் மறுப்பு

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, கிரானைட் ஊழல் வழக்கில் ஆஜராக மதுரை முன்னாள் ஆட்சியர் சகாயம் மறுப்பு தெரிவித்துள்ளார். தனது பாதுகாப்புப் பிரிவை திரும்பப் பெற்றது பாரபட்சமானது, குறைபாடுடையது மற்றும் நியாயமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, கிரானைட் ஊழல் வழக்கில் ஆஜராக மதுரை முன்னாள் ஆட்சியர் சகாயம் மறுப்பு தெரிவித்துள்ளார். தனது பாதுகாப்புப் பிரிவை திரும்பப் பெற்றது பாரபட்சமானது, குறைபாடுடையது மற்றும் நியாயமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
madurai_formercollector

உயிருக்கு அச்சுறுத்தல்: கிரானைட் ஊழல் வழக்கில் ஆஜராக சகாயம் ஐ.ஏ.எஸ் மறுப்பு

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Advertisment

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், நாமக்கல், மதுரை மாவட்டங்களில் ஆட்சியராகவும், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரியாகவும் பணியாற்றியவர். அவர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட ஆணையராக பணியாற்றி, கிரானைட் குவாரிகளில் நடந்த மாபெரும் ஊழலை வெளியில் கொண்டு வந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு அவர் சாட்சியம் அளிக்க மதுரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை.

இதுபற்றி சிறப்பு அரசு வழக்கறிஞருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், 'பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வர வாய்ப்பில்லை. எனக்கு மாநில அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டு விட்டது. என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

'பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது, தவறானது, முறையற்றது. கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளை கருத்தில்கொள்ளாமல், பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. எனவே, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலாத நிலை இருப்பதை நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும்' என்று சகாயம் அந்த கடிதத்தில் கூறி உள்ளார். 

Advertisment
Advertisements

கடந்த 2014ம் ஆண்டில் அவர், குவாரிகளில் நடந்த சட்ட விரோத செயல்பாடுகள் பற்றி விசாரிக்க நீதிமன்றத்தால் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். விசாரித்த அவர், 1990ம் ஆண்டு முதல் நடந்த குவாரி முறைகேட்டை வெளிக்கொண்டு வந்தார். அவர் தாக்கல் செய்த 600 பக்க அறிக்கையின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமானது. 'நிலைமையின் தீவிரம் தெரியாமல், தவறான முடிவு எடுத்து என் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. என்னை வெட்டி கனிம சுரங்கத்தில் வீசிவிடுவோம் என்று மிரட்டல்கள் வந்தன. மிரட்டல் கடிதங்கள் குறித்த தனது புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று சகாயம் கூறினார்.

'பாதுகாப்பை விலக்கும் முடிவை எடுத்தவர்கள், எனக்கு உள்ள அச்சுறுத்தல் பற்றி புரிந்து கொள்ளவில்லை' என்று கூறியுள்ள சகாயம், சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த ஜெகபர் அலி கொலை, திருநெல்வேலியில் நடந்த ஜாகிர் உசேன் கொலை ஆகியவற்றை சுட்டிக் காட்டியுள்ளார்.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: