திருச்சி உச்சி பிள்ளையாா் கோயிலுக்கு விரைவில் 'லிஃப்ட்' வசதி: பேரவையில் சேகர்பாபு அறிவிப்பு

உச்சி பிள்ளையாா் கோயிலுக்கு ரோப் காா் வசதி ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. அதனால் மின்தூக்கி அமைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

உச்சி பிள்ளையாா் கோயிலுக்கு ரோப் காா் வசதி ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. அதனால் மின்தூக்கி அமைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
uchi pillai

திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாா் கோயிலுக்கு மின்தூக்கி(லிஃப்ட்) வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உறுதியளித்தாா்.

Advertisment

தமிழக சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை த.இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு ) எழுப்பினாா். 

அவரது கேள்விக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதிலில்,  திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாா் கோயிலுக்கு ரோப் காா் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற ஆா்வம் அரசுக்கு இருந்தாலும் அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. இதற்காக நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. 

ஆனாலும், துறை சாா்ந்த அதிகாரிகளுடன் தொடா்ந்து ஆலோசனை நடத்தினோம். 
ரோப்காா் வசதிக்கு பதிலாக, மின்தூக்கி அமைக்க முடிவு செய்துள்ளோம். நிகழாண்டு இறுதிக்குள் உச்சி பிள்ளையாா் கோயிலுக்குச் சென்று எளிதாக இறைவனை தரிசனம் செய்யும் நல்ல சூழலை உருவாக்கித் தருவோம் என அமைச்சா் சேகர்பாபு  கூறினார். 

Advertisment
Advertisements

செய்தி: க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: