பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு, ரூ100.90-க்கும், டீசல் விலை ரூ92.48-க்கும், கேஸ்.விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறிகளின் விலை நிலவரம்: சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் வெங்காயம், தக்காளி, பூண்டு விலை குறைந்துள்ளது. மொத்த வியாபாரத்தில் வெங்காயம் கிலோ ரூ. 50க்கும், தக்காளி ரூ. 20க்கும், பூண்டு ரூ.350க்கும் விற்பனையாகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 24, 2024 00:11 ISTவிதிமீறி கட்டிய பள்ளி கட்டிடங்களுக்கு இரக்கம் காட்ட முடியாது: உயர்நீதிமன்றம்!
விதியை மீறி கட்டியுள்ள தனியார் பள்ளி தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், விதிமீறி கட்டிடங்கள் கட்டியுள்ள பள்ளிகள், மசூதிகள், தேவாலையங்கள், மற்றும் கோயில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
-
Dec 24, 2024 00:08 ISTகால்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ்களுக்கு தனித்தனியாக ரீச்சார்ஜ் செய்யும் வசதி
அடுத்த 30 நாட்களுக்குள் கால்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ்களுக்கு தனியாக ரீச்சார்ஜ் செய்யும் வசதியை அமல்படுத்த வேண்டும் என்று தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ட்ராய் உத்தரவிட்டுள்ளது.
-
Dec 23, 2024 20:49 ISTசிறுபன்மையின மக்களை அச்சுறுத்தும் பா.ஜ.க: மு.க.ஸ்டாலின்
ஒன்றிய பா.ஜ.க அரசு சிறுபன்மையின மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுகிறது. அதனால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில், மக்கள் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கொடுக்கவில்லை. இருந்தாலும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை என்று கிறிஸ்துஸ் தின விழாவில், மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
Dec 23, 2024 20:31 ISTதமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில், எந்த மாற்றமும் இல்லை: அன்பில் மகேஷ்
பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளுக்கு ‘ஆல் பாஸ்’ முறை ரத்து என ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்திருந்தது.கல்வி உரிமை சட்டத்தில், ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டங்களால், தமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில், எந்த மாற்றமும் இல்லை. தற்போதுள்ள தேர்ச்சி முறையே தொடரும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
-
Dec 23, 2024 19:29 ISTஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்விச் செலவை அரசே ஏற்கும்: தமிழக அரசு அரசாணை!
அரசுப்பள்யில் 6-12-ம் வகுப்பு வரை பயின்று, நாட்டின் முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்விச் செலவை அரசே ஏற்கும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் ஸ்காலர்ஷிப் உதவியுடன் நேரம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, முதல் பயண செலவை அரசே ஏற்றும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#திராவிடமாடல் அரசின் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) December 23, 2024
"அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும்… pic.twitter.com/BXYcA5UJLs -
Dec 23, 2024 19:25 ISTசமத்துவத்தை போற்றுவதும் பாதுகாப்பதும் தான் திராவிட மாடல்: மு.க.ஸ்டாலின்
சமத்துவத்தை போற்றுவதும் பாதுகாப்பதும் தான் திராவிட மாடல், மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தி மக்களின் உணர்வுகளை தூண்டி, பிளவுவாத அரசியல் செய்பவர்களுக்கு தான் நாங்கள் எதிரி என்று கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
Dec 23, 2024 18:25 ISTதேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமனம்!தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமனம்!
-
Dec 23, 2024 17:26 ISTபள்ளிகளில் 5 முதல் 8 வகுப்பு வரை ஆல் பாஸ் முறை ரத்து - மத்திய அரசின் கல்வி அமைச்சகம்
பள்ளிகளில் 5 முதல் 8 வகுப்பு வரை ஆல் பாஸ் முறை ரத்து செய்த் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் மறு தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
Dec 23, 2024 17:03 ISTசோதனை முறையில் மேல்மருவத்தூரில் 29 ரயில்கள் நின்று செல்லும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சோதனை முறையில் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 29 விரைவு ரயில்கள் குறிப்பிட்ட காலத்திற்கு நின்று செல்லும்; மதுரை - சென்னை வழித்தடத்தில் 29 ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும். தெற்கு ரயில்வேயின் புதிய நேர அட்டவணை ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 23, 2024 16:27 ISTஆ.ராசாவுக்கு எதிரான வழக்கு: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல்
சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. "திமுக எம்.பி., ஆ.ராசாவுக்கு எதிரான அமலாக்கதுறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கூடாது; குற்றப்பத்திரிகை நகல்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டதால் விசாரணையை தள்ளிவைக்க அவசியமில்லை. விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 23, 2024 15:48 ISTடிச.29, 30, 31 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி செல்கிறார் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு செல்கிறார். தூத்துக்குடியில் புதிதாக அமைந்துள்ள டைடல் நியோ பார்க் மற்றும் கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டு பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.
-
Dec 23, 2024 15:42 ISTசிவகங்கை மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி
சிவகங்கை மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கேட்கப்பட்டது. இலுப்பைக்குடி, அரசனூர் கிராமங்களில் ரூ.342 கோடி முதலீட்டில் 775 ஏக்கரில் தொழில் பூங்கா அமைய உள்ளது. இதன் மூலம், 36,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Dec 23, 2024 15:39 ISTமரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் 3 பேர் மாயம்; மேலும் ஒருவரின் உடல் மீட்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடிக்க சென்றபோது 3 பேர் அடித்துச் செல்லப்பட்டு மாயமனாஅர்கல். இதில், ஏற்கனவே லோகேஷ் என்பவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் தற்போது விக்ரம் என்பவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும், சூரியா என்பவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
Dec 23, 2024 15:18 ISTஇரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணைய விவாரணையில் சி.வி.சண்முகம் ஆஜர்
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் விசாரணையில் சி.வி.சண்முகம் ஆஜராகியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர்கள் கேத்தன் பால், திருமாறன், ராஜலட்சுமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
-
Dec 23, 2024 15:15 ISTநிலுவைத்தொகை தரவில்லை... தமிழக மாணவர்களையும் ஆசிரியர்களையும் வஞ்சிக்கிறது ஒன்றிய அரசு - அன்பில் மகேஸ்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும்.
இந்திய ஒன்றியத்திற்கு முன்மாதிரியாக கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு வகைகளிலும் கல்வியில் சாதனை புரியும் நமது மாணவச் செல்வங்களையும், ஆசிரியப் பெருமக்களையும் ஒன்றிய அரசு ஏமாற்றி வருகின்றது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். எங்கள் பிள்ளைகளையும் ஆசிரியப் பெருமக்களையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மாணவர்களுக்கு என்ன மாதிரியான அறிவுசார் பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு எடுத்துக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) December 23, 2024
இந்திய ஒன்றியத்திற்கு முன்மாதிரியாக கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு வகைகளிலும் கல்வியில் சாதனை புரியும் நமது மாணவச் செல்வங்களையும், ஆசிரியப்… -
Dec 23, 2024 14:53 IST"தேர்தல் நடத்தை விதி திருத்தம்: மக்களாட்சிக்கு அச்சுறுத்தல்
தேர்தல் நடத்தை விதிகளில் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கூறுகளுள் ஒன்றை மத்திய பாஜக அரசு அழித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பொய்யான வெற்றிக்கு கிடைத்த எதிர்ப்புகளால் ஏற்பட்ட பதற்றத்தின் எதிரொலி.மக்களாட்சிக்கு விரோதமான இந்தத் தாக்குதலை எதிர்க்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-
Dec 23, 2024 14:52 ISTதி.மு.கவிடம் 25 சீட் கேட்க திட்டமா? - திருமா பதில்
2026ல் திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்க வாய்ப்புள்ளதாக வன்னிஅரசு கூறியது, அவரது தனிப்பட்ட கருத்து. தேர்தல் நெருங்கும் போது தான் அதற்கான சூழல் ஏற்படும்; கூட்டணியில் பல கட்சிகள் இருக்கும் போது, அவற்றை அனுசரித்து எங்கள் முடிவை அறிவிப்போம்.
கூட்டணியில் பல கட்சிகள் இருக்கும் போது, அவற்றை அனுசரித்து எங்கள் முடிவை அறிவிப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்தார்.
-
Dec 23, 2024 14:03 ISTமருத்துவ கழிவுகளை கையாளுவதில் கேரள அரசு தோல்வி
மருத்துவ கழிவுகளை கையாளுவதில் கேரள அரசு தோல்வியடைந்துள்ளது என அம்மாநில உயர் நீதிமன்றம் கடும் விமர்சனம். தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரதில் அம்மாநில அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
-
Dec 23, 2024 13:12 ISTஸ்டாலின் உடன் விஜய பிரபாகரன் சந்திப்பு
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தின கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மகன் விஜய பிரபாகரன் அழைப்பு விடுத்தார்.
தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
நினைவு தினத்தன்று ஒரு கி.மீ தூர நினைவு தின பேரணி நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம். காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்பட அனைத்துக் கட்சி தலைவர்களையும் நேரில் அழைக்க உள்ளோம் என அண்ணா அறிவாலயத்தில் எல்.கே.சுதீஷ் பேட்டி அளித்தார்.
-
Dec 23, 2024 13:02 ISTமருத்துவக் கல்லூரிகள் - சிறப்புக் கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வரும் 30ம் தேதிக்குள் சிறப்புக் கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல இடங்கள் காலியாக இருப்பதால் நிதிப் பற்றாக்குறையை சந்திப்பதாக தனியார் கல்லூரிகள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
எனினும், ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சிறப்புக் கலந்தாய்வில் வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
-
Dec 23, 2024 13:00 ISTஅரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள் தனிப்பட்ட விபரங்கள் அல்ல: உயர் நீதிமன்றம்
அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள் குறித்த விபரங்கள் தனிப்பட்ட விபரங்கள் அல்ல - சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் காளிப்பிரியனின் சொத்து விபரங்களை, RTI சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில், 2 மாதங்களில் இதனைப் பரிசீலித்து முடித்துவைக்க மாநில தகவல் ஆணையத்திற்கு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
அரசு ஊழியர்களின் பணியை பாதிக்கச் செய்யும் தகவல்கள்தான் பாதுகாக்கப்பட்டவை. சொத்துகள், கடன் விபரங்களை பொதுமக்களின் பரிசீலனையில் இருந்து பாதுகாக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
-
Dec 23, 2024 12:36 ISTதண்டவாளத்தில் திடீர் விரிசல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. ஓங்கூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் இருந்து அதிக சத்தம் வந்ததால் லோகோ பைலட் ரயிலை நிறுத்தி உள்ளார்.
சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் பாதி வழியில் நிறுத்தம். தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணி தீவிரம், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
-
Dec 23, 2024 11:34 ISTகல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் - அன்பில் மகேஸ்
”இந்திய ஒன்றியத்திற்கு முன்மாதிரியாக கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு வகைகளிலும் கல்வியில் சாதனை புரியும் நமது மாணவச் செல்வங்களையும், ஆசிரியப் பெருமக்களையும் ஒன்றிய அரசு ஏமாற்றி வருகின்றது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். எங்கள் பிள்ளைகளையும் ஆசிரியப் பெருமக்களையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மாணவர்களுக்கு என்ன மாதிரியான அறிவுசார் பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு எடுத்துக் கொள்கிறோம்” என்று அமிச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Dec 23, 2024 11:33 ISTபின்பக்க கண்ணாடி உடைந்த அரசுப் பேருந்து - போக்குவரத்துக் கழகம் விளக்கம்
பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் கண்ணாடி உடைந்ததாகவும் அதை மாற்ற பணிமனைக்கு கொண்டு செல்லும்போது புகைப்பட எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
Dec 23, 2024 10:55 ISTமழை நிலவரம்
சேலம், நாமக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Dec 23, 2024 10:53 IST20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
நாகை சுனாமி பேரலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கீச்சாங்குப்பம் கிராமம் சென்ற உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அங்குள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். சாமாந்தாபேட்டையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று பெற்றோரை இழந்த குழந்தைகளை சந்தித்து பேசினார்.
-
Dec 23, 2024 10:50 ISTஅரசு கண்காட்சி; காவி நிறத்தில் திருவள்ளுவர் ஓவியம்!
சென்னை கோட்டூர்புரத்தில் அரசு கண்காட்சியில் காவி நிறத்தில் திருவள்ளுவர் ஓவியம் இடம்பெற்றுள்ளது. திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாஓவியக் கண்காட்சியில் மாணவர் வரைந்த திருவள்ளுவர் ஓவியம் காவி நிறத்தில் இடம் பெற்று இருந்தது பேசுப் பொருளான நிலையில் அகற்றப்பட்டது.
-
Dec 23, 2024 10:23 ISTவேதனையில் முடிந்த திரைப்பட சண்டை!
உத்தரபிரதேசத்தில் புஷ்பா 2 படம் பார்ப்பதற்கு காதலன் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை முயற்சியில் காதலி ஈடுபட்டுள்ளார். வாக்குவாதத்தின் போது திடீரென ஹோட்டலின் 3 ஆவது மாடியில் இருந்து காதலி குதித்துள்ளார். காதலனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.
-
Dec 23, 2024 10:19 ISTபின்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் இயக்கப்படும் அரசுப் பேருந்து!
திருவண்ணாமலையில் போளூர் பகுதியில் மகளிர் இலவச பேருந்தில் பின்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் இயக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
Dec 23, 2024 09:47 ISTமஞ்சப்பை தானியங்கி இயந்திரம்
சேலம் உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தின் சேவையை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
-
Dec 23, 2024 09:45 IST"வீடு மீது விமானம் மோதி 10 பேர் பலி"
பிரேசிலில் 10 பேருடன் பயணித்த சிறிய ரக விமானம், வீடு மீது மோதிய விபத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை.
-
Dec 23, 2024 09:18 ISTமீண்டும் தமிழகம் திரும்பும் காற்றழுத்த தாழ்வு பகுதி
ஆந்திராவை நோக்கி சென்ற காற்றழுத்த தாழ்வு பகுதி மீண்டும் தமிழ்நாட்டை நோக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 23, 2024 09:13 ISTஅல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் - 8 பேர் கைது
ஹைதராபாத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானிய பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக கூறி 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
Dec 23, 2024 09:10 ISTகிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி
டெல்லியில் இன்று நடைபெறும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கர்தினால்கள், ஆயர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் பிரதமர் இன்று கலந்துரையாடுகிறார்.
-
Dec 23, 2024 08:45 ISTசன்னி லியோன், ஜானி சின்ஸ் பெயரில் மோசடி!
சத்தீஸ்கரில் சன்னி லியோன் பெயரில் ஆனலைன் கணக்கு தொடங்கி அரசின் திட்டங்களைப் பெற்று மேசடி நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநில பாஜக அரசு சார்பில் திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 தொகையை பெறுவதற்கான அரசின் விண்ணப்பத்தில் சன்னி லியோன் - ஜானி சின்ஸ் தம்பதி என குறிப்பிட்டு தொகையை பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
Dec 23, 2024 08:19 ISTபுயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி,, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிகை கூண்டு ஏற்றப்பட்டது.
-
Dec 23, 2024 07:56 ISTபுதிய சுங்கச்சாவடி வசூலுக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு!
விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் அருகே கொத்தட்டை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி மையத்திற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு. கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு இன்று தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லும் தனியார் பேருந்துகளுக்கு 50 முறை சென்று வர ரூ. 14,090 கட்டணம். நெடுஞ்சாலைப் பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில், கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் பேருந்து உரிமையாளர் அதிருப்தி.
-
Dec 23, 2024 07:50 ISTயாரையும் மனதில் வைத்து சொல்லவில்லை - திருமாவளவன்
தத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்க முடியும். போராளிகளை உருவாக்க முடியாது. யாரையும் மனதில் வைத்து சொல்லவில்லை.கோட்பாடு இல்லாத தனிநபர்கள் அவர்களை பின்பற்றக்கூடியவர்களை போராளியாக வளர்த்தெடுக்க முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
-
Dec 23, 2024 07:43 ISTதிருவண்ணாமலை கார்த்திகை தீப நிறைவு நாள்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாள் இன்று. தீபமலை உச்சியில் 11வது நாளாக பிரகாசமாகக் காட்சியளிக்கும் ஈசன் மகாதீபம்.
-
Dec 23, 2024 07:41 ISTபேருந்து ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை
"அரசுப் பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 15 நாட்கள் சஸ்பெண்ட்" என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
-
Dec 23, 2024 07:40 ISTமெரினாவில் களைக்கட்டிய உணவுத் திருவிழா
சென்னை மெரினா கடற்கரையில் விடுமுறை நாளான நேற்று உணவு திருவிழாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 40 லட்ச ரூபாய்க்கு உணவுகள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Dec 23, 2024 07:38 ISTஇந்திய மகளிர் அணி அபார வெற்றி
வெஸ்ட் இண்டீசுக்கு முதல் ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா அதிரடி ஆட்டம், இந்திய மகளிர் அணி 211 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்துள்ளது.
-
Dec 23, 2024 07:35 ISTநெல்லை மருத்துவக் கழிவு விவகாரம்
நெல்லையில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றிக் கொண்டு 18 லாரிகள் கேரளா சென்றன, எஞ்சிய கழிவுகளும் இன்று நண்பகலுக்குள் அகற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
Dec 23, 2024 07:33 ISTதமிழகத்தில் மீண்டும் மழை
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
-
Dec 23, 2024 07:31 ISTதமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி!
2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்று பரப்பப்படுவது வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அணிவகுப்பு வாகனங்கள் சுழற்சி முறையில் தான் பங்கேற்க முடியும். 2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி 2026 ஆம் ஆண்டு அணிவகுப்பில் பங்கேற்க இயலும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.