Advertisment

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி; சென்னையில் தொடக்கம்

மக்களவைத் தேர்தல் 2024; வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் தொடக்கம்

author-image
WebDesk
New Update
Karnataka bye-election results announced today:

மக்களவைத் தேர்தல் 2024; வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் தொடக்கம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று (ஏப்ரல் 9) தொடங்க உள்ளது.

Advertisment

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர், பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் இன்று தொடங்குகிறது.

சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை, வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என 3 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 39 லட்சத்து 25 ஆயிரத்து 144 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னையில் 35 வேட்பாளர்களும், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும், மத்திய சென்னையில் 31 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் மட்டுமே பொருத்த முடியும். ஆனால் சென்னையில் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகிறது. 

மத்திய சென்னையில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு வாக்குச் சாவடிக்கு 2 வாக்குப்பதிவு இயந்திரமும், வடசென்னையில் 35 வேட்பாளர்களும், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும் இருப்பதால் ஒரு வாக்குச்சாவடிக்கு தலா 3 வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேவைப்படுகிறது. 

சென்னை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடி மையங்கள் 944 அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மொத்தம் 11 ஆயிரத்து 843 வாக்குப்பதிவு எந்திரங்களும், 4 ஆயிரத்து 469 கட்டுப்பாட்டு கருவிகளும், 4 ஆயிரத்து 852 வாக்காளர்கள் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனைக் கருவிகளும் (வி.வி.பேட்) தேவைப்படும். இந்த இயந்திரங்கள் சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாதுகாப்பு மையத்தில் இருந்து 16 சட்டமன்ற தொகுதிகளின் பாதுகாப்பு மையத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பின், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தக்கூடிய வாக்காளர் பெயர் மற்றும் சின்னம் அச்சடிக்கும் பணி நடைபெற்றது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி இன்று (புதன்கிழமை) வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.

மேலும், தேர்தல் நெருங்கி வருவதால் இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும். அதனை தொடர்ந்து, வரும் 18 ஆம் தேதி மாலை எந்த வாக்குப்பதிவு இயந்திரம் எந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதன் அடிப்படையில் வாக்குச் சாவடிக்களுக்குக் கொண்டு செல்லப்படும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment