Advertisment

காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் சிறப்பாக படிக்கின்றனர் - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிடம் பெற்றோர்கள் மகிழ்ச்சி

காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் சிறப்பாக படிப்பதாக, அமைச்சர் டிஆர்பி ராஜாவிடம் பெற்றோர்கள் மகிழ்ச்சி பொங்க பேசும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் சிறப்பாக  படிப்பதாக, அமைச்சர் டிஆர்பி ராஜாவிடம் பெற்றோர்கள் மகிழ்ச்சி பொங்க பேசும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.            

Advertisment

கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூலூர் தாலுகா, பதுவம்பள்ளி ஊராட்சி பகுதியில் தேர்தல் பணிமனைக்கு சென்ற தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அங்கிருந்த பொது மக்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது அங்கிருந்த மக்கள் ஆரம்ப பள்ளிகளில் முதலைமைச்சரின் காலை உணவு திட்டத்தால், குழந்தைகள் பசியின்றி இருப்பதாகவும், வீட்டில் கூட சாப்பிட மாட்டார்கள், பள்ளியில் சாப்பிடுகின்றனர். அந்த அளவிற்கு நன்றாகவும், சிறப்பாகவும் இருப்பதாகவும், இதனால் சிறப்பாக படிப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

அப்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அந்த மாணவர்களை மகிழ்ச்சியுடன் பாராட்டியதுடன், உங்களுக்கு உணவு வழங்கியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் இங்கு வர உள்ளார். நன்றாக படிக்க வேண்டும் என கூறினார்.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment