/indian-express-tamil/media/media_files/rxTmL4BqQWIKVWLGJrdK.jpg)
accident
திருபத்தூர் நாட்றாம்பள்ளி அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்ந்த சிலர் இரண்டு வேன்களில் சுற்றுலா சென்றுவிட்டு, நேற்று தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். நாட்றம்பள்ளி அருகே சண்டியூர் அருகே வந்து கொண்டிருந்தபோது ஒரு வேன் பழுது அடைந்துள்ளது. அதன் காரணமாக அதை சாலையோரம் நிறுத்தி வைத்துவிட்டு பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதே சாலையில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்த வேனில் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இதில் வேனில் பின்பகுதி மோசமாக நொறுகியது. இந்த விபத்தில், 7 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து அங்கு வந்த திருப்பத்துர் காவல்துறையினர், விபத்தில் பலத்த காயம் அடைந்த 7 பேரைமீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சம்பவ இடத்தில் உயிரிழந்து கிடந்த7 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.