Advertisment

கோவை: லாரி உரிமையாளர்கள் நவம்பர் 9-ம் தேதி வேலை நிறுத்தம்

தமிழக அரசு கனரக லாரிகளுக்கு உயர்த்தியுள்ள சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

author-image
WebDesk
Oct 26, 2023 15:00 IST
New Update
ச்ட்ரிகெ

தமிழக அரசு கனரக லாரிகளுக்கு உயர்த்தியுள்ள சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

Advertisment

 கோயம்புத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முருகேசன் செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்கனவே இயங்கி வந்த 4.50 லட்சம் லாரிகள் கொரோனா தொற்று காலத்திற்கு பின் தொழில் நெருக்கடி மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு சுங்க கட்டண அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது 2. 50 லட்சம் எண்ணிக்கையான லாரிகள் மட்டும் இயங்குகின்றன லாரி தொழிலில் நாளுக்கு நாள் அழிவை சந்தித்து வருகின்றன.

 

இந்த நிலையில் லாரிகளுக்கு பசுமை வழியாக 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்தி உள்ளது. அத்துடன் லாரிகளுக்கான காலாண்டு வரியில் 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.ஆன்லைனில் அபராதம் தங்கள் விதிப்பதை ரத்து செய்யக் கோரியும் மாநில அரசு தெரிவித்துள்ள 32 கால பதிவான சுங்க சாவடிகளை அகற்றையும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 9ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகளை இயக்காமல் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்: என்று இந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

 செய்தி: பி.ரஹ்மான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment