ஓய்வறைகள், வைஃபை: அம்ரித் பாரத் திட்டத்தில் தமிழ்நாட்டின் 77 ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள்

ஓய்வறை, இலவச வைஃபை முதல் உள்ளூர் தயாரிப்புக்கான கடைகள் வரை அம்ரித் பாரத் திட்டத்தில் ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு; தமிழகத்தில் பணிகள் நடைபெற்று வரும் 77 ரயில் நிலையங்களின் பட்டியல் இங்கே

ஓய்வறை, இலவச வைஃபை முதல் உள்ளூர் தயாரிப்புக்கான கடைகள் வரை அம்ரித் பாரத் திட்டத்தில் ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு; தமிழகத்தில் பணிகள் நடைபெற்று வரும் 77 ரயில் நிலையங்களின் பட்டியல் இங்கே

author-image
WebDesk
New Update
amrit bharat stations

இந்த ரயில் நிலையங்கள் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் (ABSS) கீழ் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. (படம்: ரயில்வே அமைச்சகம்)

Anish Mondal

Advertisment

நாடு முழுவதும் 1337 ரயில் நிலையங்களை மறுசீரமைப்புக்காக ரயில்வே அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. இந்த ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் (ABSS) கீழ் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்ரித் பாரத் நிலையத் திட்டம், நீண்டகால அணுகுமுறையுடன் தொடர்ச்சியான அடிப்படையில் ரயில் நிலையங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

அம்ரித் பாரத் நிலையத் திட்டம் என்றால் என்ன?

Advertisment
Advertisements

ரயில் நிலைய அணுகலை மேம்படுத்துதல், சுற்றுப் பகுதிகள், காத்திருப்பு அரங்குகள், கழிப்பறைகள், தேவைக்கேற்ப லிஃப்ட்/ எஸ்கலேட்டர்கள், பிளாட்பார்ம் மேற்பரப்பு மற்றும் பிளாட்பார்ம் மீது கவர், தூய்மை, இலவச வைஃபை, 'ஒரு நிலையம் ஒரு பொருள்' போன்ற திட்டங்கள் மூலம் உள்ளூர் தயாரிப்புகளுக்கான கடைகள், சிறந்த பயணிகள் தகவல் அமைப்புகள், நிர்வாக ஓய்வறைகள், வணிகக் கூட்டங்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட இடங்கள், இயற்கையை ரசித்தல் மற்றும் ஒவ்வொரு நிலையத்தின் தேவையையும் கருத்தில் கொண்டு நிலையங்களில் வசதிகளை மேம்படுத்துவதற்காக மாஸ்டர் பிளான்களைத் தயாரித்து அவற்றை கட்டம் கட்டமாக செயல்படுத்துவதை அம்ரித் பாரத் நிலையத் திட்டம் உள்ளடக்கியது.

தமிழ்நாட்டில் ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு

சனிக்கிழமை தூத்துக்குடி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருவதாகக் கூறினார். “ரயில்வே உள்கட்டமைப்பை நவீனமயமாக்கும் பிரச்சாரத்தின் முக்கிய மையமாக தமிழ்நாடு உள்ளது. அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 77 நிலையங்களை நமது அரசு மறுசீரமைப்பு செய்து வருகிறது,” என்று மோடி கூறினார்.

தமிழ்நாடு ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு - முழு பட்டியல்

தமிழ்நாட்டில் அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பிற்காக அடையாளம் காணப்பட்ட 77 ரயில் நிலையங்களின் பெயர்கள் பின்வருமாறு:

அம்பாசமுத்திரம், அம்பத்தூர், அரக்கோணம் சந்திப்பு, அரியலூர், ஆவடி, பொம்மிடி, செங்கல்பட்டு சந்திப்பு, சென்னை கடற்கரை, சென்னை எழும்பூர், சென்னை பூங்கா, சிதம்பரம், சின்ன சேலம், குரோம்பேட்டை, கோயம்புத்தூர் சந்திப்பு, கோயம்புத்தூர் வடக்கு, குன்னூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கூடுவாஞ்சேரி, கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஓசூர், ஜோலார்பேட்டை சந்திப்பு, கன்னியாகுமரி டெர்மினஸ், காரைக்குடி சந்திப்பு, கரூர் சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, கோவில்பட்டி, குளித்துறை, கும்பகோணம், லால்குடி, மதுரை சந்திப்பு, மாம்பலம், மணப்பாறை, மன்னார்குடி, மயிலாடுதுறை சந்திப்பு, மேட்டுப்பாளையம், மொரப்பூர், நாகர்கோவில் சந்திப்பு, நாமக்கல், பழனி, பரமக்குடி, பெரம்பூர், போத்தனூர் சந்திப்பு, பொள்ளாச்சி சந்திப்பு போளூர், புதுக்கோட்டை, புரட்சி தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல், ராஜபாளையம், ராமநாதபுரம், ராமேஸ்வரம், சேலம், சாமல்பட்டி, சோழவந்தான், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், தாம்பரம், தென்காசி, தஞ்சாவூர் சந்திப்பு, திருவாரூர் சந்திப்பு, திருச்செந்தூர், திருநெல்வேலி சந்திப்பு, திருப்பாதிரிப்புலியூர், திருப்பத்தூர், திருப்பூர், திரிசூலம், திருத்தணி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, உதகமண்டலம், வேலூர் கண்டோன்மெண்ட்., விழுப்புரம் சந்திப்பு, விருதுநகர், விருத்தாசலம் சந்திப்பு

(ஆதாரம்: ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஜூலை 25, 2025 அன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலின்படி)

தற்போது நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத்தொடரில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஜூலை 25 அன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தமிழ்நாட்டில் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நல்ல வேகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“இதுவரை, தமிழ்நாட்டில் 9 நிலையங்களின் (சிதம்பரம், குளித்துறை, மன்னார்குடி, போளூர், சாமல்பட்டி, ஸ்ரீரங்கம், செயிண்ட் தாமஸ் மவுண்ட், திருவண்ணாமலை, விருத்தாசலம் சந்திப்பு) கட்டம்-1 பணிகள் இந்தத் திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்டுள்ளன,” என்று அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Indian Railways Southern Railway

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: