/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-94-3.jpg)
mettupalayam murder, mettupalayam kanagaraj, varshini, attack, mettupalayam incident, மேட்டுப்பாளையம், காதல் ஜோடி, அரிவாள் வெட்டு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கனகராஜ் மற்றும் வர்ஷினி. இவர்கள் காதலித்து திருமணம் செய்துகொாண்டவர்கள். இவர்களின் காதலுக்கு வர்ஷினியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், கனகராஜ் மற்றும் வர்ஷினி மேட்டுப்பாளையம் அருகே ஸ்ரீரங்கராயர் ஓடை அருகே சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் மீது ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே கனகராஜ் மரணமடைந்தார். படுகாயமடைந்த வர்ஷினி, சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். கனகராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பட்டியலின பெண்ணை திருமணம் செய்ததற்காக, சொந்த தம்பியையே கொலை செய்திருக்கிறார் கனகராஜின் அண்ணன் வினோத்.
இதனையடுத்து, தற்போது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார் வினோத். அவர் மீது வன்கொடுமை சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, படுகாயமடைந்த வர்ஷினி பிரியா கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு வர்ஷினி பிரியா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர் முருகன் இன்று விசாரணை மேற்கொள்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.