/tamil-ie/media/media_files/uploads/2022/11/Modi-Stalin.jpg)
டிசம்பர் 5ஆம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜி20 மாநாடு தொடர்பான மாநில முதலமைச்சர்கள் கூட்டம் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள டிசம்பர் 4ஆம் தேதியே டெல்லி செல்லும் மு.க. ஸ்டாலின், அங்கு பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து பேசவுள்ளார்.
அப்போது தமிழ்நாட்டிற்கு தேவையான பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்துவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஜி20 மாநாடு குறித்த லோகோ, கருப்பொருள் உள்ளிட்டவற்றை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். அப்போது இந்த உலகமே ஒரே வாசுதேவ குடும்பம் எனக் கூறினார்.
இந்தியாவின் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள வங்க தேசம், எகிப்து, எகிப்து, மொரிசியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓணம், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.