கருணாநிதி உற்சாகம் : ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சி.ஐ.டி. காலனி வந்தார்

கருணாநிதி உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சி.ஐ.டி. காலனி இல்லத்திற்கு உற்சாகமாக வந்தார் அவர்.

கருணாநிதி உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சி.ஐ.டி. காலனி இல்லத்திற்கு உற்சாகமாக வந்தார் அவர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
M.Karunanidhi, Kanimozhi, CIT colony House

M.Karunanidhi, Kanimozhi, CIT colony House

கருணாநிதி உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சி.ஐ.டி. காலனி இல்லத்திற்கு உற்சாகமாக வந்தார் அவர்.

Advertisment

கருணாநிதியின் உற்சாகம், திமுக தொண்டர்களின் உற்சாகமாக இருக்கிறது. முரசொலி விழாவைத் தொடர்ந்து முரசொலி அலுவலகம், அதன்பிறகு தேனாம்பேட்டை அறிவாலயம் என அவ்வப்போது விசிட் அடித்து வருகிறார் கருணாநிதி.

Advertisment
Advertisements

கருணாநிதியை சந்திப்பதற்காக பிரதமர் மோடி வந்தபோது, வாசல் வரை வந்து தொண்டர்களுக்கு கையசைத்தார் கருணாநிதி. அதேபோல கடந்த 14-ம் தேதி தைப் பொங்கல் தினத்தன்று தனது கோபாலபுரம் இல்லம் தேடி வந்த தொண்டர்களுக்கு தரிசனம் கொடுத்தார் கருணாநிதி.

இந்தச் சுழலில் ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நேற்று (15-ம் தேதி) இரவு கனிமொழியின் சி.ஐ.டி. காலனி இல்லம் சென்றார் கருணாநிதி. இது பெருமிதம் தருவதாக நிருபர்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார் கனிமொழி. விரைவில் திமுக நிகழ்ச்சிகளிலும் கருணாநிதியை பார்க்கு சூழல் உருவாகும் என உற்சாகப்படுகிறார்கள் தொண்டர்கள்.

 

M Karunanidhi Kanimozhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: