தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்.எம்.சி. நோட்டீஸ்: அலட்சியப்படுத்தும் அமைச்சர் மா.சு. - விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிக்கைகளை மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் வழக்கம்போல அலட்சியப்படுத்தி உள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிக்கைகளை மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் வழக்கம்போல அலட்சியப்படுத்தி உள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ma su vs Cvijay

என்.எம்.சி. அறிக்கைகளை தொடர்ந்து அலட்சியப்படுத்தும் மா.சு. - சி.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

பேராசிரியா் வருகைப்பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல், சேவை, ஆய்வகங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் வழக்கம்போல இந்த அறிக்கையை அலட்சியப்படுத்தி உள்ளதாக  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டி உள்ளார். அனைத்து காலிபணியிடங்களும் நிரப்பப்பட்டு, குறைபாடுகளும் சரிசெய்யப்பட்டன என மா.சு. தெரிவித்தாலும், நாட்டிலேயே அதிகமான அரசு மருத்துவக்கல்வி நிறுவனங்கள் உள்ள மாநிலத்தில் எப்படி இத்தகைய குழப்ப நிலை நீடிக்கிறது என்று சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisment

"சில மாதங்களுக்கு முன்பு மருத்துவச் சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக 2 ஆயிரத்து 246 மருத்துவர்களை முதன்மை சுகாதார நிலையங்களில் பதவிக்காக நியமித்தபோது, அந்தக் குழுவில் பல பட்டதாரிகள் இருந்தனர். அவர்களை மாவட்ட மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் பணியமர்த்தப்பட்டனர். அதன் பிறகு சுமார் 415 காலியிடங்கள் இருந்தன" என்று அவர் கூறினார்.

மாநில அரசு கடந்த வாரம் நடத்திய கவுன்சிலிங் மூலம் 328 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. செவ்வாய்க்கிழமை, கூடுதலாக 87 மருத்துவர்கள் கட்டாயமாக நியமனம் செய்யப்பட்டதாக சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "இப்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு பணியிடமும் காலியாக இல்லை" என்றும் அவர் கூறினார். மேலும், தேசிய மருத்துவ ஆணைய (NMC) நிபந்தனைகளுக்கு ஏற்ப மருத்துவர்கள் உள்நுழையும்போதும், வெளியேறும் போதும் பயோமெட்ரிக் வருகை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். "என்.எம்.சி. நோட்டீஸ் அனுப்புவது வழக்கமான ஒன்று. ஒழுங்குநிலை அமைப்பு குறைகளை சுட்டிக்காட்டுகிறது; அந்தக் குறைகள் திருத்தப்படுகின்றன; உரிய தலைமை மருத்துவர்கள் எழுத்து விளக்கங்களை அளிக்கின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டான்லி, தஞ்சாவூர் மற்றும் திருச்சி போன்ற கல்லூரிகளுக்கும் இது நடந்தது. இந்த ஆண்டு, பாஜக ஆளும் மாநிலங்களில் உட்பட இந்தியா முழுவதும் குறைந்தது 400 மருத்துவக் கல்லூரிகள் இதேபோன்ற அறிவிப்புகளைப் பெற்றுள்ளன" என்று அவர் பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை " மிகைப்படுத்துவதாக" விமர்சித்தார்.

விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட அறிவிப்புகளுக்கு 25 கல்லூரிகளில் இருந்து பதில்கள் அனுப்பப்பட்டுள்ளன, மீதமுள்ளவை காலக்கெடுவுக்குள் அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை என்று சேவை மற்றும் முதுகலை மருத்துவர்கள் சங்கம் போன்ற மருத்துவர் அமைப்புகள் கடுமையாக மறுத்தாலும், முன்னாள் சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பொறுப்பற்ற முறையில் அரசு செயல்பட்டதாகவும், இளநிலை மருத்துவ இடங்களுக்கு மட்டுமல்லாமல் மக்களின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தை விளைவிப்பதாகவும் கூறினார்.

"என்.எம்.சி.யிடமிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வருவது வழக்கமானதாக இருக்கலாம், ஆனால் கிட்டத்தட்ட அனைத்து கல்லூரிகளும் ஒரே நேரத்தில் அதைப் பெறுவது அசாதாரணமானது என்பதை அவர் உணரவில்லையா?" என்று அவர் கேள்வி எழுப்பினார். "எங்கள் அரசு, இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அதிகரித்தும், மேலும் பல மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கியும் இளநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்தியது. கடந்த 4 ஆண்டுகளில், திமுக அரசு எந்த கூடுதல் இடங்களையும் சேர்க்கவில்லை. ஆனால் காலிப் பணியிடங்களை நிரப்ப கலந்தாய்வு நடத்தாததால், இருக்கும் அனைத்து கல்லூரிகளையும் குழப்பமாக்கிவிட்டனர்," என்று அவர் கூறினார்.

மருத்துவக் கல்வி இயக்குநரகம் அனுமதித்த 12,000 பணியிடங்களில் குறைந்தது 700 காலிப் பணியிடங்கள் இருப்பதாக மருத்துவர் சங்கங்கள் கூறுகின்றன. இதில் உதவிப் பேராசிரியர்கள் பதவியில் 400 காலிப் பணியிடங்களும், இணைப் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பதவியில் 300 காலிப் பணியிடங்களும் அடங்கும். "சரியான நேரத்தில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படாததால்தான் இந்த நிலை ஏற்பட்டது. இது நிறைய குழப்பத்தையும் வழக்குகளையும் ஏற்படுத்தியது. மாநில அரசு இந்த வழக்குகளை சரியான நேரத்தில் தீர்க்கவில்லை. இதன்விளைவாக கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது," என்று எஸ்.டி.பி.ஜி.ஏ மாநில அமைப்பாளர் டாக்டர் ராமலிங்கம் கூறினார். "முடிவடைந்த கலந்தாய்வு 2023 ஆம் ஆண்டு தொகுதிக்கானது. இன்னும் 2தொகுதிகள் காத்திருக்கின்றன," என்று அவர் கூறினார்.

2023-ம் ஆண்டு என்எம்சி விதிகளின்படி மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர். மாநில அரசு தற்போதுள்ள 12,000 பணியிடங்களுடன் குறைந்தது 600 கூடுதல் பணியிடங்களைச் சேர்த்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். "2023 வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச தரநிலைகளை மாநில அரசு பராமரித்து வருகிறது. சில துறைகளில், எங்களிடம் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் உள்ளனர்," என்று சுகாதாரத்துறை செயலாளர் பி. செந்தில்குமார் கூறினார். "நீதிமன்ற வழக்குகள் காரணமாக கலந்தாய்வு நடத்த முடியாததால் மட்டுமே காலிப் பணியிடங்கள் இருந்தன," என்று அவர் கூறினார்.

Chennai Ma Subramanian

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: