Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
தமிழ்நாடு

மடப்புரம் போலீசாரால் வாலிபர் கொலை: விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்

நகை திருடியதாக கூறி அஜீத்குமார் போலீசார் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் விசாரணை அறிக்கை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

Written by WebDesk

நகை திருடியதாக கூறி அஜீத்குமார் போலீசார் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் விசாரணை அறிக்கை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

author-image
WebDesk
08 Jul 2025 13:51 IST

Follow Us

New Update
Thirupuvanam Ajith Kumar postpartum report

Thirupuvanam Ajith Kumar postpartum report

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண், கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்ததையடுத்து, அவரை விசாரணைக்காக அழைத்துச்சென்ற திருப்புவனம் போலீசார், சட்டவிரோதமாக 2 நாட்கள் காவலில் வைத்துக்கொண்டு கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

Advertisment

இதனால் படுகாயமடைந்த அஜித்குமார், பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்த, தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், மதுரை திருநகரைச் சேர்ந்த மகாராஜன் என்ற நபர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "மடப்புரம் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை, திருப்புவனம் போலீசாருடன் சிலர் ரகசியமாக எடுத்துச் சென்றுள்ளனர்.

அஜித்குமாரின் உடலில் இருந்த காயங்கள் மறைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை முறையாக நடைபெறவில்லை. மேலும், குடும்பத்தினரை சமரசத்திற்கு அழுத்தம் தரும் வகையில், அதிக அளவில் பணம் தரப்படும் என கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றுள்ளது" என்றார்.

Advertisment
Advertisements

இந்த மனு நேற்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாட் அவர்களின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அஜித்குமார் மரணத்துடன் தொடர்புடைய அனைத்து வழக்குகளும் இன்றைய நாளில் (ஜூலை 8) ஒன்றிணைத்து விசாரிக்கப்பட உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையும், டிஜிபி தரப்பில் தாக்கல் செய்ய உள்ள நிலை அறிக்கையும், ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மடப்புரம் அஜித்குமார் மரணத்துடன் தொடர்புடைய பல்வேறு வழக்குகள், தற்போது ஐகோர்ட் மதுரை கிளையில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.

Madurai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!