/indian-express-tamil/media/media_files/2025/09/04/madapuram-temple-2025-09-04-05-57-21.jpg)
பௌர்ணமி பூஜை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
சிவகங்கை திருப்புவனம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவிருந்த பௌர்ணமி பூஜை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. ஞாயிறு 7ம் தேதி இரவு 9.57 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி நள்ளிரவு 1.26 மணி வரை நீடிக்கிறது. இதையடுத்து, அன்றைய தினம் மதியம் 1.00 மணிக்கு உச்சிக்கால பூஜை நடைபெற்று, பிற்பகல் 1.30 மணிக்கு நடை சாத்தப்படும்.
அதனால் ஞாயிறு அன்று மாலை நடைபெறவிருந்த அபிஷேகம் மற்றும் பௌர்ணமி பூஜை நடைபெறாது. பக்தர்கள் கோயிலுக்கு வருவதில் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு நாள் திங்கட்கிழமை (8ம் தேதி) முதல் வழக்கம் போல் அனைத்து பூஜைகளும் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.