/tamil-ie/media/media_files/uploads/2019/10/Madhu-Sudan.jpg)
PM Modi: பிரதமர் மோடி, சீன அதிபர் ஸீ ஜின்பிங், நேற்று மாமல்லபுரத்தில் சந்தித்து, புராதன சின்னங்களை பார்வையிட்டனர். அப்போது, அவர்களுக்கு மொழி பெயர்ப்பாளர்கள் இருவர் உதவினர். ஒருவர் சீன அதிகாரி. மற்றொருவர், இந்திய அதிகாரியான மதுசுதன் ரவீந்திரன்.
மாமல்லபுர சிற்பங்களின் வரலாற்று சிறப்புகளை, ஷி ஜின்பிங்குக்கு மோடி எடுத்துரைத்தார். அதனை, ஜின்பிங்குக்கு மதுசுதன் சீன மொழியில் மொழி பெயர்ப்பு செய்தார். சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த மது சுதன், 2007-ம் ஆண்டு பேட்ச் ஐ.எஃப்.எஸ்(IFS)அதிகாரி ஆவர்.
அவருடைய முதல் பணி 2009 முதல் 2011-ம் ஆண்டு சீனாவில் இந்திய தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலாளராக பணி செய்தது தான். பின்னர், இரண்டு வருடங்கள் சான் பிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தில் இரண்டாம் நிலை செயலாளராக பணியாற்றினார். பின்னர், 2013-ம் ஆண்டு மீண்டும் சீனாவுக்கு மாற்றப்பட்டார்.
தற்போது, சீனாவுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலராக இருக்கும் மது சுதனுக்கு, சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியான மாண்டரின் உள்பட பல மொழிகள் நன்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற மோடி – ஜின்பிங் சந்திப்பில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அங்கும் உடனிருந்தார் மது சுதன். முன்னதாக, 2014-ம் ஆண்டு ஷி ஜின்பிங் இந்தியாவுக்கு வந்தபோதும் மதுசுதன் மொழிப் பெயர்பாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.