Advertisment

ஸ்டெர்லைட் ஆலை இடிக்கப்படுமா? மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்க உத்தரவு

Tamil nadu News Update : ஆலையில் இருந்து வெளியான கழிவுளின் காரணமாக அப்பகுதியில் மண் மாசுபாடு ஏற்பட்டு நிலத்தடி நீர் மாசுபாடு அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
ஸ்டெர்லைட் ஆலை இடிக்கப்படுமா? மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்க உத்தரவு

Tuticorin Sterlite Issue Update : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை இடிக்க உத்தரவிடக் கோரிய பொதுநல மனு மீது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒரு மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ஆலை மூடப்பட்டது,

கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருந்தாலும், இந்த ஆலையால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மற்றும், சுற்றுச்சூழலில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை

மேலும் ஆலையில் இருந்து வெளியான கழிவுளின் காரணமாக அப்பகுதியில் மண் மாசுபாடு ஏற்பட்டு நிலத்தடி நீர் மாசுபாடு அதிகரித்துள்ளது. இதனால் ஆலை கழிவுகளை அகற்றும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை வலுத்த வந்தாலும், ஆலையின் முழு கட்டமைப்பையும் இடித்த பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியானர்  

இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் (ஏஎஸ்எம்) ஒருங்கிணைப்பாளர் பாத்திமா ஆலையை இடிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி எம்என் பண்டாரி மற்றும் நீதிபதி டி பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் இநத மனுவை நேற்று விசாரித்தது.

இதேபோல், ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், ஆலையை இடித்து, பல தசாப்தங்களாக அலகு மூலம் தாமிர தளர்ச்சியைக் கொட்டியதால் மண் மாசுபாடு மற்றும் நிலத்தடி மாசுபட்ட நிலத்தடி நீரைச் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வேதாந்தா குழுமத்தின் தாமிர உருக்காலை மாசுபாடு காரணமாக மே 28, 2018 முதல் தமிழக அரசால் மூடப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாநில அரசால் இந்த யூனிட் மூடப்பட்டாலும், இன்று வரை அந்தப் பகுதியை மீட்கவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொழிற்சாலையில் உள்ள பல்வேறு அபாயகரமான நிறுவல்களால் ஏற்படும் மாசுபாட்டை மதிப்பிடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தீர்வு காண என்ன நடவடிக்கை என்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதை தொடர்ந்து இது தொடர்பாக 4 வாரங்களில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வரும் ஜூன் மாதத்திற்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sterlite Sterlite Copper Industries
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment