Advertisment

சொகுசு கார் வரி வழக்கு; நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை!

Madras HC stays single bench judgment against actor Vijay in tax case: ஒற்றை பெஞ்சின் உத்தரவை எதிர்த்தும் அவருக்கு எதிரான மோசமான கருத்துக்களை நீக்கவும் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு அனுமதி அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
சொகுசு கார் வரி வழக்கு; நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை!

நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். 2012 இல் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் மீதான வரி செலுத்த விலக்கு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை விசாரித்தப்போது விஜய் குறித்து நீதிபதி சுப்பிரமணியன் கூறிய கருத்துக்கள் மற்றும் அவருக்கு விதித்த அபராதத்திற்கு நீதிபதிகள் எஸ்.துரைசாமி மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், இடைக்கால தடை விதித்துள்ளது.

Advertisment

ஒற்றை பெஞ்சின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யவும், அவருக்கு எதிரான மோசமான கருத்துக்களை நீக்கவும் உயர் நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு அனுமதி அளித்துள்ளது.

நடிகர் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், வரி தொகையை செலுத்த விஜய் தயாராக உள்ளதாகவும், பாதகமான கருத்துக்களுக்கு எந்த நியாயமும் இல்லை என்றும் கூறினார். இதேபோன்ற வழக்குகள் பெஞ்சால் தள்ளுபடி செய்யப்பட்டன, ஆனால் நடிகர் முன்வைத்த மனு மீது மட்டுமே பாதகமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதுபோன்ற கருத்துக்கள் எந்தவொரு மனிதனையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

"கற்றறிந்த நீதிபதி என்னை (நடிகர் விஜய்) ஒரு தேசவிரோதி என்று முத்திரை குத்துவதன் மூலம் என்மீது ஆவேசங்களை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் முழு நடிப்பு சமூகத்தின் மீதும் விமர்சனத்தை வைத்துள்ளார். ஆடம்பர கார்கள் சம்பந்தப்பட்ட இதேபோன்ற 500 மனுக்களில், (சில கார்கள் இதைவிட விலை உயர்ந்தவை), நடப்பு சட்டத்தின் படி விஜய்யின் வழக்கை தனியாக எடுக்க முடியாது, ”என்று விஜய் நாராயண் பெஞ்சில் தெரிவித்தார்.

"மோசமான கருத்துக்கள் எதிர்மறையான விளம்பரத்தை உருவாக்கியது. இது எந்தவொரு நபரையும் புண்படுத்தும், ”என்று விஜய் நாரயணன் கூறினார்.

வணிக வரித் துறையிலிருந்து புதிய கோரிக்கை அறிவிப்பைப் பெற்ற ஒரு வாரத்திற்குள் நுழைவு வரியின் 80 சதவீதத்தை செலுத்துமாறு டிவிஷன் பெஞ்ச் விஜய்க்கு உத்தரவிட்டது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர் விஜய்யின் வேண்டுகோளை தள்ளுபடி செய்தார், வரி ஏய்ப்பு என்பது "தேச விரோத பழக்கம், அணுகுமுறை மற்றும் மனநிலை மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்று கூறினார். ஒரு நபர் சரியான நேரத்தில் மற்றும் உடனடியாக வரி செலுத்தும் நபர் உண்மையான ஹீரோவாக இருப்பார் என்றும் நீதிபதி கூறினார்.

வரிவிதிப்பு முறை நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும் என்பதை எடுத்துரைத்த நீதிபதி, வரி ஒரு கட்டாய பங்களிப்பாகும், தன்னார்வ கட்டணம் அல்லது நன்கொடை அல்ல என்றும் குறிப்பிட்டார்.

நீதிபதி சுப்பிரமணியம் தனது உத்தரவில் கூறியதாவது, "இந்த நடிகர்கள் சமூகத்தில் சமூக நீதியைக் கொண்டுவருவதற்கு தங்களை சாம்பியன்களாக சித்தரிக்கிறார்கள், அவர்களின் படங்கள் சமூகத்தில் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிரானவை. ஆனால், அவர்கள் வரியைத் தவிர்த்து, சட்டத்தின் விதிகளுக்கு இணங்காத வகையில் செயல்படுகிறார்கள், பணக்காரர், வசதி படைத்தவர்கள் மற்றும் புகழ்பெற்ற நபர்கள் வரி செலுத்தத் தவறிவிடுகிறார்கள். சட்டபூர்வமான குடிமகனாக நடந்து கொள்ள வரி செலுத்த வேண்டும்.”

டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்துவதன் மூலம் தனது திரைப்படங்களைப் பார்க்கும் மில்லியன் கணக்கான ரசிகர்களின் உணர்வுகளை மதிக்குமாறு நடிகர் விஜய்யை நினைவுபடுத்திய நீதிமன்றம், “இந்த மாபெரும் தேசத்தின் புகழ்பெற்ற நபர்கள் தங்களுக்கு வரும் பணம் வானத்திலிருந்து அல்ல, கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஏழைகளிடமிருந்து வருகிறது என்பதை உணர வேண்டும்”. என்றும் கூறியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment