Advertisment

வன்முறையை தூண்டும் பேச்சு- சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ஹைகோர்ட் மறுப்பு

வன்முறையை தூண்டும் விதமாக சீமான் பேசி சர்ச்சையான நிலையில் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
seeman

சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ஹைகோர்ட் மறுப்பு

கடந்த 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisment

விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தமக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து செய்ய சீமான் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விமர்சித்து குறிப்பாக இன துரோகி, தேச துரோகி என பேசி, வன்முறையை தூண்டியதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகார் அளித்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

Advertisment
Advertisement

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி சுந்தரமோகன், பிடி வாரண்டை திரும்பப் பெறக் கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் எனவும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

 சீமானின் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு நீதிபதி சுந்தரமோகன் தள்ளிவைத்தார். ந்

High Court Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment