Advertisment

'சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை': போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சாலை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Madras High Court directs Chennai Traffic Police Tamil News

தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பி.டி. ஆதிகேசவலு தங்களது உத்தரவில், 'குடிமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது போக்குவரத்து போலீசாரின் கடமையாகும்.' என்று கூறியுள்ளனர்.

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இரு சக்கர வாகனங்களுக்கு தனி சாலை பாதை (லேன்) வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் எஸ். குமார தாஸ் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, இந்த மனுவுக்கு ஜூன் 22-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

Advertisment

இதற்கு பதில் அளித்த மாநில அரசு வழக்கறிஞர் பி.முத்துக்குமார், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்.) பணிகள் நகரின் பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்று வருவதால், வண்டி செல்லும் பாதை குறைந்துள்ளதாகவும், சென்னை மாநகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் பாதை ஒழுங்குமுறையை அமல்படுத்த இயலாது என்றும் தெரிவித்தார்.

பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பி.டி. ஆதிகேசவலு தங்களது உத்தரவில், "போக்குவரத்து மேலாண்மை என்பது ஒரு சிக்கலான பிரச்சினை என்பதில் சந்தேகமில்லை. இதைப் பராமரிக்க அதிக செயல்திறன் தேவைப்படும். நெரிசலான இடங்கள் அல்லது நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் வெவ்வேறு வகை வாகனங்களுக்கான பாதைகளை நாம் எதிர்பார்க்க முடியாது.

நெரிசல் மற்றும் பல்வேறு காரணங்களால் நகரின் அனைத்து சாலைகளிலும் வாகன ஓட்டிகளிடையே தனி சாலை பாதை (லேன்) ஒழுக்கத்தை உறுதி செய்ய முடியாது. ஆனால் இதுதான் காவல்துறையின் கடமை. சாலையை பயன்படுத்துபவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்தை சீரான முறையில் சீரமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது போக்குவரத்து போலீசாரின் கடமையாகும். மேலும் விதிமீறல் வாகனங்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போக்குவரத்து மற்றும் வாகனங்களின் சீரான இயக்கத்திற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலளிக்கும் கிரேட்டர் சென்னை போக்குவரத்து காவல்துறை (ஜிசிடிபி) அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர்.

பல்வேறு வகை வாகனங்களுக்காக பிரத்யேக பாதைகள் அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் பாதையைத் தாண்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுவாக போக்குவரத்து விதிகளை மீறுவதை தடுக்கும் வகையில் செயல்படும், பிற சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறினர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Greater Chennai Corporation Madras High Court Police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment