ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ஏன் தனிப்பிரிவை துவங்க கூடாது? தமிழக அரசுக்கு கேள்வி!
அரசு புறம்போக்கு நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தடுக்க, அந்த நிலங்கள் குறித்த விவரங்கள் அனைத்து மாவட்ட பதிவுத்துறைக்கு ஏன் வழங்கக் கூடாது உயர் நீதிமன்றம் கேள்வி!
அரசு புறம்போக்கு நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தடுக்க, அந்த நிலங்கள் குறித்த விவரங்கள் அனைத்து மாவட்ட பதிவுத்துறைக்கு ஏன் வழங்கக் கூடாது உயர் நீதிமன்றம் கேள்வி!
Madras high court directs Tamil Nadu government to setup a department to deal encroachments
Madras high court directs Tamil Nadu government : தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பை கண்டறிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை எடுப்பதற்காக தனி பிரிவை ஏன் துவங்கக் கூடாது என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள மச்சிநாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள ராமராஜ் என்ற தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டுமானங்கள் மேற்கொள்ள சார்பு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
Advertisment
Advertisements
இந்த உத்தரவை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர் கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை, அரசு வழக்கறிஞர் முறையாக நடத்தவில்லை எனக் கூறி, சம்பந்தப்பட்ட அரசு வழக்கறிஞருக்கு எதிராக அளித்த புகார் மீதான விசாரணையை முடிக்கும்படி, பார் கவுன்சிலுக்கு உத்தரவிடக் கோரி, ஆக்கிரமிப்புக்கு எதிராக புகார் அளித்த அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புருஷோத்தமன், வரும் 10 தேதி இந்த வழக்கில் கோவை நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. முறையாக விசாரணை நடத்தாமல் ஒருதலை பட்சமான தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அரசு வழக்கறிஞர் மீது உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அளித்த புகார் மனுவை பரிசீலிக்க பார்கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் அரசு வழக்கறிஞர், ஆக்கிரமிப்பாளருடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும், எனவே கோவை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.
அரசு நிலங்கள், அரசு புறம் போக்கு நிலங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கில், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், வருவாய் துறை செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர்.
மேலும், தமிழகம் முழுவதும், மாவட்ட வாரியாக எத்தனை ஏக்கர் அரசு மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன? அதில் எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது? இந்த நிலங்களை மீட்க தொடரப்பட்ட வழக்குகள் எத்தனை? அதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? அதில் எத்தனை வழக்குகளில் அரசுத்தரப்பு முறையாக வழக்கை நடத்தவில்லை? எத்தனை வழக்குகளில் ஒருதலைபட்சமான தீர்ப்பு அளக்கபட்டுள்ளது?
வழக்குகளை முறையாக நடத்தாத அரசுத்தரப்பு வழக்கறிஞர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என, சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல, தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பை கண்டறிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை எடுப்பதற்காக தனி பிரிவை ஏன் துவங்கக் கூடாது என்பது குறித்து பதிலளிக்கும்படி அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தடுக்க, அந்த நிலங்கள் குறித்த விவரங்கள் அனைத்து மாவட்ட பதிவுத்துறைக்கு ஏன் வழங்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பி, அவற்றுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"