Advertisment

'அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்

அதிகாரம் மிக்க நபர்கள் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்பாக தன்னிடம் பேசியதால் தான், வழக்கை அவசரமாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
 Madras High Court Justice GR Swaminathan on Savukku Shankar Goondas act case Tamil News

நீதிபதி சுவாமிநாதன் தொடர்பாக அவதூறு கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்ததாகவும் கூறி தானாக முன்வந்து வழக்கை விசாரித்தார் நீதிபதி.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் (Savukku Shankar), ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி, கோவை போலீசார் அவரை தேனியில் வைத்து கைது செய்தனர். 

Advertisment

இந்த வழக்கில் சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே, சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்படும் போது, அவரது காரில் கஞ்சா வைத்திருந்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 2 நாள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி அளித்தது. இந்த வழக்கில் சவுக்கு சங்கர் தரப்பு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், கால அவகாசம் கோரியதால் இந்த மனு மீதான விசாரணை மே 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டி, கோவையைத் தொடர்ந்து சேலம், சென்னை, திருச்சி சைபர் க்ரைம் போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருச்சியில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா, சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். 

சவுக்கு சங்கர் மீது மொத்தமாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த 12 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து சவுக்கு சங்கரின் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். 

இதனை அவரச வழக்காக விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் - பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் பிற்பகல் 2:15 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பு உத்தரவிட்டனர். 

நேற்று மாலை நடந்த விசாரணையில், தமிழக முதல்வரை ஒருமையில் பேசியதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், சவுக்கு சங்கர் எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்ளவார் என்பது தொடர்பான உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், மனு மீதான விசாரணையை மறுநாளுக்கு (இன்று வெள்ளிக்கிழமை) தள்ளி வைத்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை தொடங்கி நடந்த விசாரணையின் போது, தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்வதற்கு முன் இறுதி விசாரணை நடத்தலாமா? என்ற விஷயத்தில் நீதிபதிகள் இடையே மாறுபட்ட கருத்து நிலவியது. தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்வதற்கு முன் வழக்கை இறுதி விசாரணைக்கு எடுக்க அவசியம் இல்லை என்று நீதிபதி பாலாஜியும், தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்யாவிட்டாலும் இன்றே இறுதி விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி சுவாமிநாதனும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த மனு மீதான உத்தரவை பிற்பகலுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்த நிலையில், மீண்டும் தொடங்கி நடந்த விசாரணையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.  சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். 

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது உத்தரவைப் படிக்கத் தொடங்கிய போது, அதிகாரம் மிக்க நபர்கள் இந்த வழக்கு தொடர்பாக தன்னிடம் பேசியதாகவும், வழக்கில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டால், அந்த நபர்கள் தங்கள் நோக்கத்தை அடைந்து விடுவார்கள் என்பதால், அவசரமாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும் விளக்கம் அளித்தார்.

மேலும் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவில், சவுக்கு சங்கருக்கு எதிரான போதைப்பொருள் வழக்கை குறிப்பிடவில்லை எனவும், பொது அமைதி பாதிக்கப்படவில்லை, கைது செய்யப்பட்ட எந்த வழக்கிலும் ஜாமீன் வழங்கப்படாததால், உடனடியாக விடுதலை செய்யப்பட வாய்ப்பில்லை, காவல்துறை மனதை செலுத்தாமல் குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்கப் பட்டுள்ளதாகக் கூறி, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

அதேநேரத்தில், சவுக்கு சங்கரின் தாய் மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு அனுமதியளித்த பின், ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மற்றொரு நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார். இரு நீதிபதிகளும் இரு வேறு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளதால் இந்த வாழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு நீதிபதிகள் பரிதுரை செய்தனர். அதேசமயம், கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கரை புழல் சிறைக்கு மாற்ற இரு நீதிபதிகளும் ஒருமித்த உத்தரவை பிறப்பித்தனர்.

 முன்னதாக, மேல் மட்ட நீதித்துறை முழுவதிலும் ஊழல் படிந்திருப்பதாகவும், நீதிபதி சுவாமிநாதன் தொடர்பாக அவதூறு கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்ததாகவும் கூறி தானாக முன்வந்து வழக்கை விசாரித்தார் நீதிபதி. அந்த வழக்கில் சவுக்கு சங்கர் உறுதி வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அப்போது அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதியாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Savukku Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment