Advertisment

விலங்குகள் நல வாரிய செயலாளருக்கு எச்சரிக்கை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

"இந்திய விலங்குகள் நல வாரியம் தரப்பில் எவரும் ஆஜராகாவிட்டால், செயலாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும்" என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Madras High Court orders constitution of special team to trace out missing lands donated to Vallalar Tamil News

சான்றிதழ்கள் இல்லாமல், அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்வதை தடுக்கக் கோரி வழக்கில் விலங்குகள் நல வாரிய செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Chennai High Court: உரிய சான்றிதழ்கள் இல்லாமல், அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்வதை தடுக்கக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. 

Advertisment

அப்போது, உரிய சான்றிதழ்கள் இல்லாமல், சந்தேகத்துக்கு இடமான வகையில் அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்லப்படுவதைக் கண்டறிந்தால், சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிகள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், இந்த வழக்கு தொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியம் தரப்பில் எவரும் ஆஜராகாவிட்டால், வாரிய செயலாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment