Advertisment

கஜ புயல் நிவாரணம்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

Gaja Cyclone Relief: கஜ புயல் தாக்கியதில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cyclone Gaja Relief Assessment, Madras High Court, கஜ புயல் சேதம், கஜ புயல் நிவாரணம், சென்னை உயர் நீதிமன்றம்

Cyclone Gaja Relief Assessment, Madras High Court, கஜ புயல் சேதம், கஜ புயல் நிவாரணம், சென்னை உயர் நீதிமன்றம்

Madras High Court: கஜ புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஏற்பட்ட சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்து உரிய இழப்பீடு வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும் படி, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கஜ புயல் தாக்கியதில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் சேதங்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும், அவற்றை மதிப்பீடு செய்யக் கோரியும் சென்னை கொரட்டூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், புயல் காரணமாக தஞ்சையில் 83 கிராமங்களும், புதுக்கோட்டையில் 43 கிராமங்களும், நாகையில் 87 கிராமங்களும் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன எனக் கூறியுள்ளார்.

இக்கிராமங்களில் 2 லட்சம் தென்னை மரங்கள் விழுந்து விட்டதாகவும், ஹெக்டேருக்கு 2.64 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதாகவும், அது போதுமானதல்ல எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பல கிராமங்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடையவில்லை என்பதால், அந்த கிராமங்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, மத்திய, மாநில அரசுகள் வரும் 29 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

 

Rain In Tamilnadu Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment