பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சி.பி.ஐ. விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கக் கோரிய மனுவுக்கு, ஏப்ரல் 10க்குள் பதிலளிக்க தமிழக அரசு, சிபிஐ க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையிலும், புகார் அளித்த பெண்ணின் சகோதரர் மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் அடிப்படையிலும் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகள், சி.பி.சி.ஐ.டி.யிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு, கடந்த 13 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்நிலையில், இந்த வழக்குகளில் சி.பி.ஐ. நடத்தும் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க கோரி வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி பிறப்பித்த உத்தரவில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரைக் குறிப்பிட்டது, மற்ற பெண்களை புகார் அளிக்காமல் தடுக்கும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். எனவே இந்த புகார் தொடர்பாக நடைபெறும் சிபிஐ விசாரணை உயர்நீதிமன்றம் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி நீதிபதி கே.துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முக்கியமான மற்றும் தீவிரமான இந்த வழக்கின் விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வகையில் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இதையடுத்து மனு தொடர்பாக ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு, சிபிஐ க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Madras high court orders tn govt and cbi to respond
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி