/tamil-ie/media/media_files/uploads/2023/07/senthil-balaji-chennai-hc-2.jpg)
அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழக அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை ED க்கு காவலில் வைப்பது தொடர்பாக மேலும் எந்த உத்தரவையும் பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இதற்கு மேல் நாங்கள் எதுவும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று நீதிபதி ஜே நிஷா பானு மற்றும் நீதிபதி பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.
அமலாக்கத்துறை அமைச்சரை கைது செய்ததன் செல்லுபடியாகும் தன்மை குறித்து டிவிஷன் பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை கருத்தில் கொண்டு, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியான நீதிபதி சி வி கார்த்திகேயனுக்கு மாற்றப்பட்டது.
ஜூலை 14 அன்று, நீதிபதி கார்த்திகேயன், நீதிபதி பரத சக்கரவர்த்தியுடன் ஒத்துப் போய், கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார்.
இதற்கிடையில், காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, புழல் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
செவ்வாயன்று, இந்த மனு, டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி நிஷா பானு, ஜூலை 4 தேதியிட்ட தனது தீர்ப்பில் நிற்பதாகவும், இந்த விஷயத்தில் மேற்கொண்டு எதுவும் கூற முடியாது என்றும் கூறினார்.
இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, காவலில் இருக்கும் தேதியை முடிவு செய்வதற்காக மட்டுமே இந்த வழக்கு மீண்டும் பெஞ்சிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
“என்னால் தேதியை முடிவு செய்ய முடியாது. அவரை விடுவித்த என் தீர்ப்பில் நான் நிற்கிறேன், ”என்று நீதிபதி நிஷா பானு பதிலளித்தார்.
அமைச்சரின் மனைவி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதிடலாம் என்று கூறினார்.
தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யும் என்று குறிப்பிட்டு, மனு முடித்து வைக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.