Advertisment

கிறித்துவ கல்வி நிலையங்கள் குறித்த சர்ச்சையான கருத்தை திரும்ப பெற்ற சென்னை உயர் நீதிமன்றம்

அப்பாவி ஆண்களை பாதுகாக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தங்களை கொண்டு வருவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும் என்ற கருத்தை திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madras high court seeks explanation from Tamil Nadu government,

Madras high court removed controversial comments against christian educational institutes

Madras high court removed controversial comments against christian educational institutes : பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் அப்பாவி ஆண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தை திரும்பப் பெற்றது சென்னை உயர் நீதிமன்றம்.

Advertisment

சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் மாணவ - மாணவிகள், கடந்த ஜனவரி மாதம் பெங்களூரு, மைசூரு, கூர்க் போன்ற ஊர்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். சுற்றுலா முடிந்து திரும்பியதும், 34 மாணவிகள் கையெழுத்திட்டு, (சாமுவேல் டென்னிசன் மற்றும் ரவின்) (குறிப்பு - பெரயை பயன்படுத்த வேண்டாம் என நினைக்கிறேன்) ஆகிய இரு பேராசிரியர்களும் பாலியல் தொல்லை அளித்ததாக் கல்லூரி முதல்வருக்கு புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், பணிநீக்கம் செய்வது தொடர்பாக (சாமுவேலுக்கு) பேராசிரியர்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு நீதிபதி வைத்தியநாதன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது

பேராசிரியர் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, தன்னுடைய உத்தரவில், தற்போது கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன எனவும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து பெற்றோர் மத்தியில் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நல்ல கல்வியை வழங்கினாலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா? என்றால் அது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.  பெண்களின் பாதுகாப்புக்கு பல சட்டங்கள் இயற்றப்பட்ட போதும், அவை ஆண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, அதற்கு வரதட்சணை தடைச் சட்டமே சிறந்த சான்றாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்கவும், அப்பாவி ஆண்களை பாதுகாக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தங்களை கொண்டு வருவது குறித்து அரசு சிந்திக்க வேண்டிய தருணம் இது எனவும் நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சென்னை கிறிஸ்தவ கல்லூரி சார்பில் கடந்த செவ்வாய் கிழமை நீதிபதி வைதியநாதன் முன் முறையீடபட்டது. அதில் வழக்குக்கு தொடர்பில்லாத கருத்துகளை நீக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கபட்டது. இதனையடுத்து, நீதிபதி ஏற்கனவே பிறப்பிக்கபட்ட உத்தரவில் 32 ஆவது பத்தியை நீக்குவதாகவும் அந்த பத்தியில் தெரிவிக்கபட்ட, கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன எனவும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து பெற்றோர் மத்தியில் நிலவுவதாகவும், நல்ல கல்வியை வழங்கினாலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா? என்றால் அது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது என்பதை திரும்ப பெறுவதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் தவறாக பயன்படுத்தபடுவது தொடர்பான கருத்தை திரும்ப பெற வேண்டும் என கோரி மூத்த வழக்கறிஞர் வைகை தலைமையிலான வழக்கறிஞர்கள் நீதிபதி வைதியநாதன் முன் இன்று முறையீட்டனர்.

அந்த முறையீட்டை ஏற்று கொண்ட நீதிபதி திரும்ப பெற்றார் நீதிபதி வைத்தியநாதன் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் பெண்களின் பாதுகாப்புக்கு பல சட்டங்கள் இயற்றப்பட்ட போதும், அவை ஆண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், அதற்கு வரதட்சணை தடைச் சட்டமே சிறந்த சான்றாக உள்ளது எனவும்,

பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்கவும், அப்பாவி ஆண்களை பாதுகாக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தங்களை கொண்டு வருவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும் என்ற கருத்தை திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.

Tamil Nadu Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment