Advertisment

பொறியியல் ஆன்லைன் விண்ணப்பத்திற்கு எதிராக வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

அண்ணா பல்கலைகழக பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் முறைக்கு தடை விதிக்கக்கோரி வழக்கில் ஒரு வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

Advertisment

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மாணவர் அணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ-வுமான சி.வி.என்.பி.எழிலரசன் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனுவில், மார்ச் 26 ஆம் தேதியோடு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்தது. நடப்பாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி தமிழக உயர்கல்வி துறை சார்பில் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கபட்டுள்ளது. அதன்படி, 2018-19 பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தல், சான்றுகள் சரிபார்த்தல், இடங்கள் ஒதுக்கீடு அனைத்தும் ஆன்லைன் மூலமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பின் மூலம் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவே இந்த விதியை மாற்றி ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்கலைகழகத்திலிருந்து விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து, விண்ணபிக்கும் ஆப்லைன் முறையையும் அனுமதிக்க வேண்டும்.

மேலும், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் கலந்துகொள்ள கிராமப்புற மற்றும் தமிழ்வழியில் கற்ற மாணவர்களுக்கு போதுமான கணினி மற்றும் இணையதள தெளிவு இல்லாமல் இருப்பார்கள் என்பதால், பொறியியல் படிப்பை இழக்கவும் நேரிடும். எனவே இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மட்டுமல்லாமல் ஆப்லைனிலும் விண்ணப்பங்களை பெற அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறும் என்ற கடந்த ஆண்டு அரசாணை ரத்து செய்யவும், ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறுவதற்கு தடைவிதிக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விடுமுறை கால சிறப்பு கால அமர்வில் நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த ஆண்டும் ஆப் - லையன் மூலம் விண்ணப்பங்கள் விநியோகிக்க வேண்டும் என்றனர். அதற்கு நீதிபதிகள், தற்போது அனைத்தும் ஆன்லையன் மூலம் மற்றபட்டு வருகின்றதே? என கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் மனு தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசின் உயர்கல்வித்துறை, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியோர்க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை அடுத்த வாரம் தள்ளிவைத்தனர்.

Chennai High Court Anna University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment