/indian-express-tamil/media/media_files/2025/09/27/tvk-vignesh-2025-09-27-12-02-23.jpg)
மதுக்கரை மரப்பால பணிகள் முடக்கம்: பணிகளை விரைந்து முடிக்க கோரி த.வெ.க. ஆர்ப்பாட்டம்
கோவை அருகே மதுக்கரை மரப்பாலம் இரயில்வே கீழ்ப்பாலத்தை அகலப்படுத்தும் பணியை இரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் தொடங்கினர். ஆனால், பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பாலக்காடு சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால், முடங்கியுள்ள பணிகளை மீண்டும் துவங்கி, அவற்றை விரைந்து முடிக்க வலியுறுத்தி த.வெ.க.வினர் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
தலைவர் விக்னேஷ் குற்றச்சாட்டுகள்
த.வெ.க.வின் கோவை தெற்கு மாவட்டத் தலைவர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய விக்னேஷ், "மரப்பாலம் அகலப்படுத்தும் பணிகள் முடங்கியுள்ளதால், பிரதான பாலக்காடு சாலையில் தினமும் வேலைக்குச் செல்லும் மக்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத தமிழக அரசு, ஆங்காங்கே புதிய மதுக்கடைகளைத் திறப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மதுக்கரை நகராட்சியில் தொடர்ந்து பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஊழலைக் கண்டித்து விரைவில் மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களைத் திரட்டி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் விக்னேஷ் அறிவித்தார்.
செய்தி: பி. ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.