இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 64 அரிய வகை உயிரினங்கள்; மதுரை ஏர்போர்ட்டில் பறிமுதல்

அரிய வகை ஆமைகள், பாம்புகள் மற்றும் பல்லிகள் உள்பட 64 உயிரினங்களை இலங்கையில் இருந்து கடத்தி வந்த பயணி; பறிமுதல் செய்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

அரிய வகை ஆமைகள், பாம்புகள் மற்றும் பல்லிகள் உள்பட 64 உயிரினங்களை இலங்கையில் இருந்து கடத்தி வந்த பயணி; பறிமுதல் செய்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
madurai sri lanka

மதுரை விமான நிலையத்தில் இன்று அதிரடியான சோதனையின் போது, இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 64 அரிய வகை உயிரினங்களை சுங்கத்துறையின் நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisment

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் மதுரையை வந்தடைந்த வேலூரைச் சேர்ந்த ஒருவர், தனது பயணப் பெட்டியில் இந்த உயிரினங்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெட்டியைத் திறந்த போது, அதில் அரிய வகை ஆமைகள், பாம்புகள் மற்றும் பல்லிகள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், இலங்கை விமான நிலையத்தில் சந்தித்த ஒருவர் இந்தப் பெட்டியை “சாக்லேட் உள்ளது” என கூறி மதுரை விமான நிலையத்தின் வெளியே உள்ள நபரிடம் கொடுக்க சொல்லியதாக பயணி வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

Madurai Sri Lanka

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: