ஆன்மீகம் தெரிந்த ஆளுநர் நமக்கு கிடைத்திருக்கிறார் என்று சமஸ்கிருத பாரதி தமிழ்நாடு தொடக்க விழாவில் மதுரை ஆதினம் பேசி உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சமஸ்கிருத பாரதி தமிழ்நாடு தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மதுரை ஆதினம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அப்போது பேசிய மதிரை ஆதினம் “ தமிழ்நாட்டில் பிறப்பது புண்ணியம். இது ஒரு ஆன்மீக பூமி. ஆளுநரை விமர்சிக்கின்றனர். ஆன்மீகம் தெரிந்த ஆளுநர் நமக்கு கிடைத்திருக்கிறார். எல்லோரும் சைவ உணவை சாப்பிட வேண்டும். ஒருவர் என்ன உணவு உண்கிறாரோ அப்படித்தான் அவர்களது செயல்பாடு இருக்கும்.” என்று அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய ஆளுநர் ” உலகில் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். பகவத் கீதையை தொடர்ந்து படித்தால் நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள். இது எனது கல்லூரி காலங்களில் எதை பெற வேண்டும் என்பதற்கு உதவியது “ என்று அவர் கூறினார்.