நியோமேக்ஸ் வழக்கு: 'எஃப்.ஐ.ஆர் மட்டும் போதாது; பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு முக்கியம்' – மதுரை ஐகோர்ட்

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, 'எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது மட்டும் போதுமானது அல்ல. பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு முக்கியம்' என்று கூறியுள்ளார்.

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, 'எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது மட்டும் போதுமானது அல்ல. பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு முக்கியம்' என்று கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Madurai Bench of Madras High Court on Neomax financial fraud case Tamil News

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, 'எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது மட்டும் போதுமானது அல்ல. பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு முக்கியம்' என்று கூறியுள்ளார்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சங்கம், ரூ.6,000 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்துக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, "தமிழ்நாடு வைப்பாளர் பாதுகாப்பு சட்டம் (TNPID) இத்தகைய நிதி மோசடிகளை தடுக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது மட்டும் போதுமானது அல்ல. புலனாய்வு அமைப்புகள், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை மீட்டுப் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

அதேபோல், பொருளாதார குற்றப்பிரிவு, புகார்கள் வந்த பின்னரே நடவடிக்கையில் இறங்குவது தவறான அணுகுமுறை என்றும், முன்கூட்டியே விழிப்புடன் செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாக நீதிபதி வலியுறுத்தினார். 

Madurai High Court Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: