'தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு': மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து

டாஸ்மாக் பார்களில் சுகாதாரம், உணவு பொருட்கள் காலாவதி, கூடுதல் விலைக்கு விற்பனை ஆகியவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி வழக்கில், 'தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு' என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Madurai Bench of Madras HC questions TN Govt over ganja case Tamil News

மனுதாரர் தேவைப்பட்டால் மதுவை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து அருந்திக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

டாஸ்மாக் பார்களில் சுகாதாரம், உணவு பொருட்கள் காலாவதி, கூடுதல் விலைக்கு விற்பனை ஆகியவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. 

Advertisment

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது போன்ற கோரிக்கைகளை நீதிமன்றம் ஊக்குவித்தால், மதுப்பழக்கத்தை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் என்றும், மனுதாரர் தேவைப்பட்டால் மதுவை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து அருந்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tasmac Madurai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: