Advertisment

மத்திய அரசு, நிதி அமைச்சகம் உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில்லை: நீதிபதிகள் காட்டம்

மத்திய அரசும், நிதி அமைச்சகமும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில் தோல்வியடைந்துள்ளது. ஆனால் உத்தரவுக்கு தடை விதித்தால் மட்டும் உடனடி மேல்முறையீடா? - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

author-image
WebDesk
New Update
Madurai High Court Branch Judges have said that they should examine the 3-year background of the companies conducting campus interviews

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை

மத்திய அரசும், நிதி அமைச்சகமும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில் தோல்வியடைந்துள்ளது. பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தாத மத்திய அரசு, அதன் உத்தரவுக்கு தடை விதித்தால் மட்டும் உடனே மேல் முறையீட்டுக்கு வருவதை ஏற்றுக் கொள்ள முடியுமா? என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை காட்டமாக பதிலளித்துள்ளது.

Advertisment

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், "மத்திய அரசின் சார்பில் வனப் (பாதுகாப்பு) திருத்த சட்ட மசோதா 2023 முன்மொழியப் பட்டுள்ளது. இதற்கான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. இந்தி, ஆங்கிலம் தெரியாதவர்கள் கருத்து தெரிவிக்க முடியாது. எனவே மத்திய அரசின் இந்த அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும் "என மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய அரசின் வனப் பாதுகாப்பு திருத்த சட்ட மசோதா அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இந்த தடை உத்தரவை ரத்து செய்ய அனுமதிக்க கோரி மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர், நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வில் இன்று(ஜுன் 1) முறையீடு செய்தார். இந்த முறையீடைக் கேட்டு கோபமடைந்த நீதிபதிகள். "மத்திய அரசின் வனப் பாதுகாப்பு திருத்த சட்ட தடை உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய என்ன அவசரம்.

உயர் நீதிமன்றம் மத்திய அரசிற்கு பல்வேறு வழக்குகளில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை நிறைவேற்றுவதில்லை. குறிப்பாக மதுரையில் கடன் வசூல் தீர்ப்பாயம் பல வருடங்களாக செயல்படாமல் உள்ளது. அதற்கு விசாரணை அதிகாரி நியமனம் செய்ய உத்தரவிட்டும் இதுவரை நிறைவேற்ற வில்லை.

இதுபோல் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவைகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறினார். ஆனால் மத்திய அரசின் உத்தரவை நீதிமன்றம் தடை விதித்ததை மட்டும் உடனடியாக விசாரணைக்கு அனுமதிக்க முறையீடு செய்கிறீர்கள். இது எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்றி விட்டு வாருங்கள்" என்றனர். இதையடுத்து மேல்முறையீடு வழக்கை உடனடியாக விசாரணை செய்ய முடியாது. மனுத் தாக்கல் அனுமதித்த நீதிபதிகள் அடுத்த திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக கூறினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Madurai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment