Advertisment

மதுரை மக்களுக்கு ஒரு குட்நியூஸ்... புத்தக கண்காட்சி செப்டம்பர் 6-ல் தொடக்கம்!

மதுரை மாவட்டத்தில் புத்தக கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் வரும் செப்டம்பர் 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Madurai Book Fair date announcement Tamil News

புத்தக கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் வரும் செப்டம்பர் 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் புத்தக கண்காட்சி தற்போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரையில் தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார். 

Advertisment

இது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை மாவட்டத்தில் புத்தக கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் வரும் செப்டம்பர் 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

காலை 11 மணி முதல் இரவு 9  மணி வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும், புத்தக கண்காட்சிகள் நாள்தோறும் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகள்  சிந்தனை பேச்சுக்கள் இடம் பெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினர் செய்ய தொடங்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment