உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மாட்டுப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.16) மஞ்சள் மலை ஆற்றின் மைதான திடலில் தொடங்கின.
முன்னதாக உறுதிமொழியுடன் எடுக்கப்பட்டது. இந்தப் போட்டியை மதுரையை சேர்ந்த பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார்.
இந்தப் போட்டியில் இதுவரை 14 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துள்ளிக் குதித்து சீறி வரும் காளைகளை காளையர்கள் அடக்கினர்.
இந்த நிலையில், எதிர்பாாத விதமாக காளை முட்டியதில் மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்ட அவரை மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரவிந்த் ராஜ், அதிக காளைகளை அடக்கிய பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தார். 4-ஆம் சுற்று நிறைவில் 16 காளைகளை அடக்கிய மணி முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் ராஜா உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/