/indian-express-tamil/media/media_files/OzfaopC3JJhgpU27daso.jpg)
மதுரை துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மீது ஜெய்ஹிந்த் புரம் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
மதுரை மாநகராட்சியின் துணை மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நாகராஜன் பொறுப்பு வகித்து வருகிறார். ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வசிக்கும் வசந்தா என்பவர் துணை மேயர் நாகராஜனின் நண்பர்களிடம் வாங்கிய கடனுக்கு ஈடாக அவரது வீட்டை எழுதி தருமாறு கேட்டு துணை மேயரின் சகோதரர் மற்றும் நண்பர்கள் மிரட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 2024 ஜூலையில் துணை மேயர் உள்ளிட்ட அவரது நண்பர்கள் ஐவரும், வசந்தா மற்றும் குடும்பத்தினரை சாதிய ரீதியாக திட்டி மிரட்டி, தாக்கியதாக ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் மீது துணை மேயர் மீது வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளது.
இது குறித்து மாவட்ட நீதிமன்றத்தில் வசந்தா கொடுத்த மனுவின் அடிப்படையில் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் ராஜேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.