/indian-express-tamil/media/media_files/2025/04/21/KXrWg8Ih9dwU6H8RzbuC.jpg)
அழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு, சனிக்கிழமை (மே 10) அன்று மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. அழகர் கோவிலிலிருந்து மதுரைக்கு புறப்படும் காரணமாக, அழகர்கோவில் சாலையில் இடைக்கால போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
ஊரகக் காவல் துறை வெளியிட்ட அறிவிப்பு பதிவின்படி, மதுரையிலிருந்து மேலூர் செல்லும் வாகனங்கள், சனிக்கிழமை கள்ளந்திரி, லட்சுமிபுரம், மாங்குளம், கிடாரிபட்டி வழியாக செல்ல வேண்டும்.
மேலூரிலிருந்து மதுரை நோக்கி வரும் வாகனங்கள், காயர்புரம், நாயக்கன்பட்டி வழியாக செல்ல வேண்டும். அழகர்கோவிலுக்கு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சனிக்கிழமை பகல் 1 மணி வரை கோயில் வளாகம் வரை அனுமதிக்கப்படும்.
கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. எனவே, மதுரை-அழகர்கோவில் சாலை, மேலூர்-கிடாரிபட்டி சாலை மற்றும் சீகுபட்டி சந்திப்பு வழியாக அழகர்கோவிலுக்குச் செல்லும் அனைத்து வழிகளும் சனிக்கிழமை காலை முதல் கட்டுப்பாட்டில் இருக்கும்.
வாகன நிறுத்தும் இடங்கள்:
இருசக்கர வாகனங்கள்: அம்புவிடும் மண்டபம், பிரகாஷ் அய்யர் கார்டன் (மாண்டிசோரி பள்ளி சந்திப்பு), அம்மன் மகால் அருகே.
நான்கு சக்கர வாகனங்கள்: கேரள நீட் அகாடமி, மா.சத்திரப்பட்டி சந்திப்பு, ஐஸ்வர்யா கார்டன், முத்துலட்சுமி அரிசி ஆலை.
சிறிய ரக சரக்கு வாகனங்கள்: மாங்காய் தோட்டம்
தற்காலிக பேருந்து நிறுத்தம்: கோட்டை இரண்டாவது நுழைவு வாயில், பாலாஜி அவென்யூ.
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், மாற்றப்பட்ட போக்குவரத்து திட்டத்தை பின்பற்றி ஒத்துழைக்குமாறு காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us