/indian-express-tamil/media/media_files/2025/08/18/police-madurai-2025-08-18-21-36-19.jpg)
மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் நிறுவன ஒப்பந்தம் ரத்து, கொரோனா கால ஊக்கத் தொகை வழங்கல், தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் மயத்தைக் கண்டித்தும் குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனான 3-ம் சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் அவர்களை போலீசார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் நிறுவன ஒப்பந்தம் ரத்து, கொரோனா கால ஊக்கத் தொகை வழங்கல், தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் தூய்மை பணியாளர்கள் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது மதுரை, நெல்லை, நாகப்பட்டினம், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இந்த போராட்டம் பரவி வருகிறது.
மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்குச் செல்லும் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன. அங்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் இரண்டு முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையும் எந்தத் தீர்வுமின்றி முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தூய்மை பணியாளர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில், மதுரை மாநகராட்சி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.