Coimbatore, Madurai, Trichy News: இந்து மதத்தை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை அவமதிக்காதீர்கள்: பவன் கல்யான்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pawan kaly

மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு: இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்களின் மாநாடு மதுரை பாண்டிகோயில் திடலில் இன்று (ஜூன் 22) பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்டை மாநிலங்களில் உள்ள பாஜக முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர். கந்தசஷ்டி கவசத்துடன் தொடங்கும் மாநாட்டில், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

  • Jun 22, 2025 23:50 IST

    வாடகைக்கு குடியிருந்த நபரே வெறிச்செயல்

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த நபர், கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபரே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.



  • Jun 22, 2025 23:50 IST

    நெல்லை - காவலருக்கு அரிவாள் வெட்டு

    பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில், குடும்பத்துடன் பொழுதுபோக்க வந்த காவலருக்கு அரிவாள் வெட்டு. அரிவாளால் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.



  • Advertisment
  • Jun 22, 2025 21:35 IST

    இந்து மதத்தை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை அவமதிக்காதீர்கள்: பவன் கல்யான்

    ஒரு இந்து, இந்துவாக திகழ்ந்தால் மதவாதியாக கருதப்படுகிறார். இந்து மதத்தை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை அவமதிக்காதீர்கள். முருகர் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வெவ்வேறு பெயர்களில் திகழ்கிறார்.  நிறத்தில் பேதம் இல்லை, அகத்தின் வழியே பார்க்கிறோம் கடவுள், கலாசாரம், பண்பாட்டை கேலி செய்தனர். சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்தது மதுரையில்தான். இப்படை தோற்கின் எப்படை வெல்லும், வெற்றியின் படிக்கட்டு அன்பு நாச சக்திகளை கிள்ளி எறிய வேண்டும். இந்துக்களை சீண்டிப் பார்க்க வேண்டாம் பேச்சு சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர். பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் இஷ்டத்துக்கு பேசுகின்றனர் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்



  • Jun 22, 2025 19:20 IST

    முருகன் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

    மதுரை, முருகன் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.



  • Advertisment
    Advertisements
  • Jun 22, 2025 18:45 IST

    ஒருமித்த கலாசாரங்கள் மாறிவிடக் கூடாது என்பதற்காக முருகன் மாநாடு நடத்தப்படுகிறது - நயினார் நாகேந்திரன்

    ஒருமித்த கலாசாரங்கள் மாறிவிடக் கூடாது என்பதற்காக முருகன் மாநாடு நடத்தப்படுகிறது என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், ஏதாவது ஒரு மொழியை தான் படிக்க சொல்கிறோம் என்றும், தமிழ், தெலுங்கு, மலையாளம் எல்லாம் ஒரே கலாசாரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 22, 2025 18:24 IST

    முருகன் மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற பெண் உயிரிழப்பு

    முருகன் மாநாட்டில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து சென்ற பெண் உயிரிழந்தார். அதன்படி, ஆத்தூரில் இருந்து 20 பேர் பயணித்த வேனில் முச்சுத்திணறல் ஏற்பட்டு கவிதா என்ற பெண் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 22, 2025 17:08 IST

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு பங்கேற்பு

    மதுரையில் இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு பங்கேற்றுள்ளனர். 



  • Jun 22, 2025 16:47 IST

    கலை நிகழ்ச்சிகளோடு முருக பக்த மாநாடு தற்போது தொடக்கம்

    முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநாட்டில் கலந்து கொண்டு உள்ளார். கலை நிகழ்ச்சிகளோடு முருக பக்த மாநாடு தற்போது தொடங்கியுள்ளது.



  • Jun 22, 2025 16:25 IST

    4 கி.மீ தூரம் நடந்து செல்லும் மக்கள்

    மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் அம்மா திடலுக்கு முன்னர் உள்ள சாலை முழுதும் மக்கள் வெள்ளத்தால் குவிந்துள்ளது. பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு மக்கள் நடந்து செல்கிறார்கள். மாநாட்டு திடலை சுற்றி அமைக்கப்பட்ட 20 க்கும் மேற்பட்ட வாகன நிறுத்தங்கள் நிரம்பின. 



  • Jun 22, 2025 16:25 IST

    முருகன் மாநாடு - வருகை தரும் பக்தர்கள்

    மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்று வரும் முருக பக்தர் மாநாடு பகுதிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து  சன்னியாசிகள் மற்றும் பக்தர்கள் வருகை தந்து கொண்டு உள்ளனர். 



  • Jun 22, 2025 16:01 IST

    வாகனங்களில் தீவிர சோதனை

    முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் வாகனங்களில்  போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 



  • Jun 22, 2025 15:33 IST

    உணர்வுகளை பாதிக்கக்கூடிய வகையில் வைக்கப்பட்டுள்ள பலகைகளை அகற்றுங்கள்

    உதகை ரயில் நிலையத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கக்கூடிய வகையில் வைக்கப்பட்டுள்ள பலகைகளை அகற்றுங்கள் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு திமுக எம்.பி. ஆ.ராசா கடிதம் எழுதியுள்ளார். 



  • Jun 22, 2025 15:31 IST

    பவணுக்கு சால்வை அணிவித்த அண்ணாமலை

    மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை,  சால்வை அணிவித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்றார். 



  • Jun 22, 2025 13:43 IST

    பவன் கல்யாண் மதுரை வருகை: முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பு

    ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

    மதுரை விமான நிலையத்தில் இருந்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர். பவன் கல்யாண் வருகையால் மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



  • Jun 22, 2025 13:29 IST

    பவன் கல்யாண் மதுரை வருகையில் சிக்கல்: விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

    ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மதுரைக்கு வரவிருந்த தனி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவரது பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரவிருந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோளாறு சரிசெய்யப்பட்ட பின் புறப்படுவாரா அல்லது மாற்று விமானம் மூலம் வருவாரா என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனால், அவரை வரவேற்கக் காத்திருந்தவர்கள் மத்தியில் சற்று பரபரப்பு நிலவுகிறது.



  • Jun 22, 2025 13:28 IST

    மதுரை முருக பக்தர்கள் மாநாடு: ஆறுபடை வீடுகளின் மாதிரி தரிசனம் - பக்தர்கள் கூட்டம்

    மதுரை முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனைத் தரிசிப்பதற்காக முருக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்துள்ளனர்.

    மாநாடு இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் காரணத்தால் முருகனின் அருபடை பொருட்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.



  • Jun 22, 2025 13:24 IST

    மதுரை முருகர் மாநாட்டிற்கு காவல்துறை ஒத்துழைப்பு இல்லை - எல்.முருகன் 

    மதுரை முருகர் மாநாட்டிற்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இது கட்சி சார்ந்த மாநாடு அல்ல என்றும், அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி பங்கேற்கும் ஆன்மீக மாநாடு என்றும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார். முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியுள்ளார்.



  • Jun 22, 2025 13:07 IST

    ஓசூர் மேம்பாலத்தில் விரிசல்; சேதாரம் இல்லை - அதிகாரிகள் தகவல்

    கிருஷ்ணகிரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓசூரில் அமைந்துள்ள மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை ஆய்வு செய்த அதிகாரிகள், பாலத்தின் கட்டமைப்பில் சேதாரம் இல்லை, பேரிங் மாற்றி பொருத்தப்படும் என தெரிவித்தனர்.



  • Jun 22, 2025 12:38 IST

    ஓலா தொழிற்சாலை விரிவாக்கம்: 3,850 பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்பு

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் அமைந்துள்ள ஓலா செல் டெக்னாலஜிஸ் தொழிற்சாலை ரூபாய் 4,302 கோடியில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 3,850 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ரூபாய் 998 கோடியில் தொழிற்சாலைக்கான முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



  • Jun 22, 2025 12:19 IST

    ம.தி.மு.க பொதுக்குழு: 'கூடுதல் தொகுதி' கோரி தீர்மானம்

    ஈரோட்டில் இன்று நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுக்குழு கூட்டத்தில், "கூடுதல் தொகுதி" கோரும் முக்கிய தீர்மானம் உட்பட மொத்தம் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறும் வகையில், வரவிருக்கும் தேர்தல்களில் கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைப் பெற்று போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், கட்சி நலன் மற்றும் அரசியல் சூழலுக்கு ஏற்ப, 28 திருத்தச் சட்டங்களைத் திருத்தி அமைக்கும் தீர்மானங்களும் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.



  • Jun 22, 2025 11:57 IST

    தொழில்நுட்பக் கோளாறு: மதுரை விமானம் ரத்து 

    சென்னையில் இருந்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மதுரை செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு. தமிழிசை உள்ளிட்ட பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது.



  • Jun 22, 2025 11:46 IST

    கிருஷ்ணகிரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் இடைவெளி; கலெக்டர், எம்.பி ஆய்வு

    ஓசூர் பேருந்து நிலையம் அருகே கிருஷ்ணகிரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் ஏற்பட்ட இடைவெளி குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.பி. ஆய்வு செய்தனர். தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டறிந்தனர். 2வது நாளாக இன்றும் மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.



  • Jun 22, 2025 10:42 IST

    ம.தி.மு.க.,வின் 31வது மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் தொடக்கம்

    ஈரோட்டில் ம.தி.மு.க.,வின் 31வது மாநில பொதுக்குழு கூட்டம் கட்சியின் அவைத்தலைவர் அர்ஜூன் ராஜ் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்



  • Jun 22, 2025 10:40 IST

    வேலை வாங்கி தருவதாக மோசடி - 5 பேர் கைது

    அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை கடத்தி சென்ற வழக்கில் திண்டுக்கல்லில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் தலைமறைவான நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்



  • Jun 22, 2025 09:44 IST

    மதுரை முருக பக்தர்கள் மாநாடு - எல்.முருகன் பேட்டி

    தமிழகத்தில் நடைபெறுகிற இந்த முருக பக்தர்களின் மாநாடு ஒரு மிகப்பெரிய எழுச்சியை கொடுக்கின்ற மாநாடாக இந்த மாநாடு இருக்கும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.  

    மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் இன்று (ஜூன் 22) இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.

    மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ள நிலையில் தினமும் மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் முருகபக்தர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர்

    இந்நிலையில் முருகபக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்த மத்திய இணையமைச்சர் எல் முருகன் அங்கு முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முருக பக்தர்கள் மாநாட்டிற்கு உலகம் முழுவதும் இருக்கிற முருக பக்தர்கள் இங்கு வர உள்ளனர் என்றும் இன்று (22.06.25) மாலை 6 மணிக்கு மாநாடு நடைபெறும் இடத்தில் லட்சக்கணக்கானோர் ஒன்று கூடி கந்த சக்ஷடி கவசம் பாட உள்ளனர் என்றார்.

    அதேபோன்று மாநாடு நடைபெறும் இடத்திற்கு வர இயலாதவர்கள்  அனைவரும், அவர்களின் வீடுகளில் இருந்து அதே நேரத்தில் கந்த சக்ஷ்டி பாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் அவர்களும் தானாக முன்வந்து கந்த சக்ஷ்டி கவசத்தை பாடுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

    மேலும், தமிழகத்தில் நடைபெறுகிற இந்த ஆன்மீக மாநாடு, முருக பக்தர்களின் மாநாடு, ஒரு மிகப்பெரிய எழுச்சியை கொடுக்கின்ற மாநாடாக இந்த மாநாடு இருக்கும் என்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.



  • Jun 22, 2025 09:35 IST

    திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

    விடுமுறை தினம் என்பதால் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த நிலையில்  4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.



  • Jun 22, 2025 09:31 IST

    5 வயது சிறுவன் கொலை

    ஸ்ரீபெரும்புதூர் அருகே ஓரினசேர்க்கைக்கு மறுத்த 5 வயது சிறுவனை கல்லால் அடித்துக் கொலை செய்த அசாம் இளைஞரை போலீசார் கைது செய்தனர். பீகாரை சேர்ந்த தம்பதியின் 5 வயது மகனின் சடலம் முட்புதரில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.



  • Jun 22, 2025 09:31 IST

    மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு

    இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்களின் மாநாடு மதுரை பாண்டிகோயில் திடலில் இன்று (ஜூன் 22) பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

    மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்டை மாநிலங்களில் உள்ள பாஜக முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர். 

    கந்தசஷ்டி கவசத்துடன் தொடங்கும் மாநாட்டில், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.



tamilnadu news Tamil News Live Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: