மதுரை மாநகராட்சி தி.மு.க மேயர் இந்திராணி பொன்வந்த் ராஜினாமா

மதுரை மாநகராட்சி தி.மு.க மேயர் இந்திராணி பொன்வந்த் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் புதன்கிழமை அளித்தார்.

மதுரை மாநகராட்சி தி.மு.க மேயர் இந்திராணி பொன்வந்த் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் புதன்கிழமை அளித்தார்.

author-image
WebDesk
New Update
Indrani Ponvasanth

அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் மதுரை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் மேயர் இந்திராணியின் ராஜினாமா கடிதம் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும் சித்ரா விஜயன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற வரி முறைகேடு தொடர்பான வழக்கைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளின் நடுவே, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் இன்று (15.10.2025) திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

Advertisment

சில மாங்களுக்கு முன்பு, மதுரை மாநகராட்சியில், சொத்து வரி மற்றும் கட்டட அனுமதி தொடர்பாக கோடிக் கணக்கான ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவர் மீது மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாகவும் மாநகராட்சி வரி வசூலில் பெரும் வேறுபாடுகள் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த நிலைய்ல், மதுரை மாநகராட்சி தி.மு.க மேயர் இந்திராணி மீது அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான அழுத்தம் அதிகரித்தது. இந்த நிலைமை தீவிரமடைந்த நிலையில்,  மதுரை மாநகராட்சி தி.மு.க மேயர் இந்திராணி இன்று காலை தனது பதவியில் இருந்து விலகுவதாக மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் அளித்தார்.

அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் மதுரை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் மேயர் இந்திராணியின் ராஜினாமா கடிதம் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும் சித்ரா விஜயன் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements
Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: