New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/31/tkzZJtVHv3FpeREfcJsc.jpg)
தேர்தல் காலத்தை முன்னிட்டு நடைபெறும் இந்தப் பொதுக்குழு, தி.மு.க-வின் அடுத்த கட்ட செயல் திட்டங்களுக்கு திசைகாட்டக் கூடியதாக இருக்கலாம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், தி.மு.க-வின் மிக முக்கியமான பொதுக்குழு கூட்டம் நாளை (ஜூன் 1) மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், சுமார் 6,500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 10,000 பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
அந்த வகையில், பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவருந்தும் வகையில் மிகப்பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சைவம் மற்றும் அசைவம் என இரு வகையிலும் உணவுகள் தயார் செய்யப்பட இருக்கின்றன.
சைவ உணவுப் பட்டியலில் குல்கந்து பர்பி, சப்பாத்தி, வெஜிடபிள் பிரியாணி, சாம்பார், பால் பாயாசம் என பண்டிகை கால உணவுகள் இடம்பெற்றுள்ளன. அசைவ உணவுப் பட்டியலில் மட்டன் எண்ணெய் சுக்கா, வஞ்சர மீன் வறுவல், நாட்டுக்கோழி மிளகு கறி, ஜிகர்தண்டா, ஐஸ்க்ரீம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தேர்தல் காலத்தை முன்னிட்டு நடைபெறும் இந்தப் பொதுக்குழு, தி.மு.க-வின் அடுத்த கட்ட செயல் திட்டங்களுக்கு திசைகாட்டக் கூடியதாக இருக்கலாம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.