மதுரை மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் முறை இல்லை எனக் கண்டறியப்பட்டது. இதுகுறித்து ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் வரும் 15 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பல்ராம் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த ஓர் வழக்கில் 2023 ஆம் ஆண்டு அக்.20 ஆம் தேதியன்றும், கடந்த 11- ஆம் தேதியன்றும் நீதி மன்றம் வழங்கிய உத்தரவுகளின்படி, மதுரை மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்கள் கைளால் அகற்றும் முறை நடைமுறையில் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, மனிதக் கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் பணியில் தொழிலாளர்கள் எவரும் ஈடுபடுவதில்லை. இந்தப் பணியில் ஈடுபட்டிருப்போர் யாரேனும் ஊரகப் பகுதிகளில் இருந்தால், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு, மறுவாழ்வு சட்டம் 2013, பிரிவு எண்.11-இன் படி தங்களது ஆட்சேபங்களை தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் வரும் 15 நாள்களுக்குள் எழுத்துபூர்வமாகத் தெரிவிக்கலாம் என்றார் அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“