/indian-express-tamil/media/media_files/2025/03/21/kORg0EM8bA9HmneD3lzb.jpg)
மதுரை சக்குடியை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது 70). இவர் இன்று காலை கழுகர் கடையில் இருந்து பெரியார் பஸ் நிலையம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். பஸ் கீழவாசல் பஸ் நிறுத்தத்தில் நின்றுள்ளது.
அப்போது, பாண்டியம்மாள் பஸ்சில் இருந்து இறங்கி, பஸ்ஸின் முன் பகுதியை கடந்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது பஸ்ஸை இயக்கிய டிரைவர், முன் பகுதியை சரியாக கவனிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. பஸ் நகர்ந்ததும் பாண்டியம்மாள் அதன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பான தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.