Advertisment

மதுரைக்கு வந்தது விடிவு காலம்! நம்ம ஊருக்கு எப்போது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
plastic ban in madurai

plastic ban in madurai

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை இன்று முதல் மதுரையில் அமலுக்கு வந்தது. இந்தத் தடை குறித்த அறிவிப்பைக் கடந்த ஜூலை 2ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

சுற்றுச் சூழலை காக்கும் பொருட்டு மதுரையில் ஜூலை 2ம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்தார். அந்த வகையில் தற்போது மதுரையில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் தடை விதிக்க 5 மாதங்கள் உள்ள நிலையில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக துணிப்பைகள், காகித பைகள், கோப்பைகள், தென்னை, பனை ஓலைக் கூடைகள் ,பாக்கு மட்டைத் தட்டுகள் பயன்படுத்தலாம் என்றார். மேலும் சுற்றுச் சூழல், நிலத்தடி நீரை உயர்த்தச் சூழலை காக்கும் கடமை அனைவருக்கும் உண்டு என உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

2019 ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்கப்பட உள்ளது. அதன் முன்னோட்டமாக ஒவ்வொரு மாவட்டமாக பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு வருகின்றது. இதன் முதற்கட்டமாக மதுரையில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment