/indian-express-tamil/media/media_files/2025/09/19/madurai-2025-09-19-18-40-25.jpg)
Madurai
மதுரை: தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80ஆவது ஆண்டு விழா மதுரையில் நடைபெற்றது. மதுரை சிந்தாமணி வேலம்மாள் மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஐடாஸ்கட்டர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி 0% மற்றும் 5% என குறைக்கப்பட்டதற்காக, பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த விழாவில், சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.எஸ்.ஆர். நடராஜன், கௌரவ ஆலோசகர் எஸ்.பி. ஜெயப்பிரகாசம், தலைவர் வேல்சங்கர், கௌரவ சுப்பிரமணியம், செயலாளர் சாய், பொருளாளர் கார்த்திகேயன், துணைத்தலைவர்கள் காமராஜ், திலகராஜன், கிரிதரன், ஜெயகர், மாதவன், இணைச் செயலாளர்கள் நாகராஜன், ராகவேந்திரா, பரமாநந்தம், சுரேஷ்பாபு, கிஷோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.