பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை கள்ளிப்பால் கொடுத்து கொலை: அதிர்ச்சி தகவல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
madurai girl baby killed by parents

madurai girl baby killed by parents

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

வைரமுருகன்-சௌமியா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி அந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி வீட்டின் அருகிலேயே அக்குழந்தை புதைக்கப்பட்டிருக்கிறது. குழந்தையின் இறப்பு குறித்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் எழுப்பவே கிராம நிர்வாக அதிகாரி புகார் அளித்திருக்கிறார்.

ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குகள் - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி வட்டாட்சியர் செந்தாமரை, டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான குழுவினர் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தினர்.

Advertisment
Advertisements

இதில் பிறந்து 31 நாளே ஆன பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து பெற்றோரே கொன்றது அம்பலமானது. இதனை அடுத்து வைரமுருகன்-சௌமியா மற்றும் வைரமுருகனின் தந்தை ஆகியோரை செக்காணூரணி போலீசார் கைது செய்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: