/indian-express-tamil/media/media_files/2025/09/09/goripalaiyam-flyover-1-2025-09-09-22-43-44.jpg)
பல கட்டங்களாக நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 8,375 சதுரமீட்டர் நிலத்தைப் பெற வருவாய் நிர்வாக ஆணையர் சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளார்.
மதுரை கோரிப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் ரூ.190.40 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நில ஆர்ஜித பணிகள் தற்போது 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பல கட்டங்களாக நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 8,375 சதுரமீட்டர் நிலத்தைப் பெற வருவாய் நிர்வாக ஆணையர் சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, சில கட்டிடங்களை நெடுஞ்சாலைத்துறை மற்றும் உரிமையாளர்கள் இணைந்து இடித்ததுடன், நிலம் ஒப்படைக்கப்பட்ட பகுதிகளில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/09/goripalayam-flyover-3-2025-09-09-22-46-25.jpeg)
அதிகாரிகள் தெரிவித்ததாவது: “இம்மாத இறுதிக்குள் நில ஆர்ஜித பணிகள் முழுமையாக நிறைவு பெறும். தூண்கள் அமைந்துள்ள பகுதிகளில் மேல்தளம் அமைக்கும் பணி தொடங்கப்படும். மேலும், பிற பகுதிகளில் அணுகுசாலை அமைக்கும் முதல்கட்ட பணிகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும்” என தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.